Sunday, 4 January 2009
ஒரு நிமிடத் தேர்வு.
என் இயல்புகள்
1. என்னால் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடிகிறது.
2. நிகழ்ச்சிகளுக்கு என்னால் குறித்த நேரத்தில் செல்ல முடிகிறது.
3. வேலைக்கு / தொழில் இடத்திற்கு நான் சரியான நேரத்திற்கு செல்வது உண்டு.
4. குடும்பத்திற்கெனப் போதுமான நேரம் ஒதுக்குவது உண்டு.
5. நான் எப்போதும் பரபரப்போ டென்ஷனோ அடைவது இல்லை.
6. மற்றவர்களின் வேலைகளையும் நான் எடுத்துச் செய்வது உண்டு.
7. தூக்கத்திற்கு நான் முக்கியத்துவம் தருவது இல்லை.
8. பார்க்கவேண்டிய பல கடமைகளையும் பல பொறுப்புக்களையும் நான் சரிவர முடித்துவிடுகிறேன்.
9. பணத்தைவிட நேரமே முக்கியம் என்று கருதுகிறேன்.
10. என் எதிர்காலம் குறித்தும் இலட்சியங்கள் குறித்தும் நான் தெளிவாக இருக்கிறேன்.
11. உடல்நலத்திற்கென நான் தினமும் சிறிது நேரமாவது செலவழிக்கிறேன்.
12. திருமணம், மரணம், பிற சமூக நிகழ்வுகளில் நான் முடிந்தவரை தவறாது கலந்து கொள்கிறேன்.
கேள்விகளைக் கவனமாகப் படியுங்கள். அவற்றில் வேண்டு மென்றே பொடி வைத்திருக்கிறேன். `ஆம்' என்றால் மட்டும் டிக் செய்யுங்கள். `இல்லை' என்றால் விட்டு விடுங்கள்.
`ஆம்'கள் 5க்கும் கீழா? ஊகும்! உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை; சாரி!
5 முதல் 7 `ஆம்'களா? போதாது. இன்னும் சில `ஆம்'களைப் பெற்று மேலே வாருங்கள். 8 முதல் 11 ஆம்களா? தேறிவிட்டீர்கள்.
என்னது! 12 `ஆம்'களா? பெப்சி, கொக்கோகோலா நிறுவனத்தில் தலைமைப் பதவியைக் கேட்டு வாங்குங்கள்!
மனித வாழ்வின் இயந்திரப் பிரதிநிதிகள் கடிகாரமும் நாட்காட்டிகளும்தாம். இவற்றில் அலட்சியம் காட்ட வேண்டாம்..
Saturday, 3 January 2009
நம்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த
1950-ம் ஆண்டு கணக்கின்படி நம்நாட்டின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், 2008-ன்படி 1,040 பில்லியன் டாலர் என்கிற அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம். 1950 முதல் 1992 வரை உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5.7 சதவிகித வளர்ச்சி மட்டுமே அடைந்து வந்தோம். 1992 முதல் 2008 வரை நாம் அடைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி 8.2%. இந்த எக்ஸ்பிரஸ் வளர்ச்சிக்குக் காரணம், மத்திய அரசாங்கம் எடுத்த சில முக்கியமான முடிவுகள்தான். லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்தது, இறக்குமதி வரியைச் சீர்படுத்தியது, வெளிநாட்டு முதலீட்டைத் தளர்த்தியது, பணமாற்றத்தை அதிகப்படுத்தியது போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்ததினால்தான் ஆண்டுதோறும் 8.2% சராசரி வளர்ச்சி அடைய நம்மால் முடிந்தது. அதற்கும் மேலாக 9 சதவிகித வளர்ச்சியையும் நம்மால் காண முடிந்தது.
ஆனால், இப்போது நம்நாட்டின் ஜி.டி.பி. குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், கடந்த காலங்களில் இதைவிடக் குறைவான வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம். 1999-2002 வரை நாம் கண்டது 6 சதவிகிதத்துக்கும் குறைவான வளர்ச்சியே! ஜி.டி.பி. வளர்ச்சி எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் அமையாது. அது கொஞ்சம் மேலும் கீழுமாகத்தான் செல்லும்.
இப்போது நம்நாட்டின் ஜி.டி.பி-யின் வளர்ச்சி குறையக் காரணம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு. அதன் விளைவாக இங்கே சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. என்றாலும், நம்நாட்டின் பொருளாதார அடிப்படை மிகவும் பலமாக இருக்கிறது. நம் வங்கிகளின் செயல்பாடு எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கிறது. தவிர, நம் பொருளாதாரம் பெருமளவில் அமெரிக்காவையோ அல்லது வேறு வெளிநாட்டையோ நம்பி இல்லை. எனவே அமெரிக்காவைப் போல நாமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி காணாமல் போய்விடுவோமோ என்று பயப்படத் தேவையில்லை.
அதிலும் குறிப்பாக, கட்டுமானத் துறையில் நாம் அடிப்படையாகச் செய்யவேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றில் எதையும் நாம் நிறுத்தவும் முடியாது; தள்ளி வைக்கவும் முடியாது. உதாரணமாக, சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்... இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு வெறும் 2% மட்டுமே. இந்தியாவில் ஒரு சரக்கு வாகனம் சராசரியாக நாளன்றுக்கு 200 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்கிறது. சர்வதேச அளவில் ஒரு சரக்கு வாகனம் சராசரியாக 800 கி.மீ. தூரம் வரை பயணம் செய்கிறது. எனவே, நாம் புதிய சாலைகளை அவசியம் அமைத்தாக வேண்டும்.
ரயில் பாதை அமைப்பதிலும் இதே நிலைதான். இந்தியாவில் ஒவ்வொரு 1,000 சதுர கி.மீட்டருக்கு வெறும் 35 கி.மீட்டர் மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் பார்த்தால் 150 கி.மீட்டருக்கு ரயில் பாதை அமைத்திருக்கின்றனர். இதுமாதிரி, அணை கட்டுவது, விமான நிலையங்கள் அமைப்பது, மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, துறைமுகங்களை உருவாக்குவது என எந்த ஒரு கட்டுமானப் பணியையும் நம்மால் நிறுத்திவிட முடியாது.
இந்த நிலையில் மீண்டும் 9 சதவிகிதத்தை அடைய அல்லது அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்? மத்திய அரசாங்கம் பி.பி.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப்பை இன்னும் அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பி.பி.பி. மாடல் வெற்றிகரமாக நடந்துவருகிறது. கட்டுமானத் துறை வேலைகளுக்கான டெண்டர் அறிவிப்புகளைத் தாமதிக்காமல் உடனுக்குடன் வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டங்களுக்கான நிலங்களைக் கொடுப்பதிலும் அரசாங்கம் வேகம் காட்டவேண்டும்.
கட்டுமானத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும் காலம் தாழ்த்தக்கூடாது. வங்கிகள் இப்போது வசூலிக்கும் வட்டி விகிதத்தை இன்னும் குறைக்கவேண்டும். இந்த அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கட்டுமானப் பணிகள் தடையின்றி வேகமாக நடக்கும். பொருளாதாரம் சீராகும் நேரத்தில், நம்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த இந்த நடவடிக்கைகள் நிச்சயம் உதவும்.
How to calculate India GDP
C stands for consumption which includes personal expenditures pertaining to food, households, medical expenses, rent, etc
I stands for business investment as capital which includes construction of a new mine, purchase of machinery and equipment for a factory, purchase of software, expenditure on new houses, buying goods and services but investments on financial products is not included as it falls under savings
G stands for the total government expenditures on final goods and services which includes investment expenditure by the government, purchase of weapons for the military, and salaries of public servants
X stands for gross exports which includes all goods and services produced for overseas consumption
M stands for gross imports which includes any goods or services imported for consumption and it should be deducted to prevent from calculating foreign supply as domestic supply
Wednesday, 31 December 2008
பிச்சை புகினும்.. - பத்மா, பெங்களூரு (நன்றி: அவள் விகடன்)
இப்படிப்பட்ட சூழலில் எனது பள்ளிக் கட்டணத்தை ஊர்ப் பெரியவர் ஒருவர் தானே கட்டுவதாகக் கூறி, என்னைப் படிக்க வைத்தார். ஒருமுறை அவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் பணம் கட்டவில்லை.
அப்போது 'ப்ரீ ஃபைனல் எக்ஸாம்' நடந்து கொண்டிருந்தது. பரீட்சைக்குப் பணம் கட்டாததால் எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர் என்னை பரீட்சை எழுத அனுமதிக்க மறுத்துவிட்டார். அதோடு, 'இப்படி யாசகம் எடுத்துப் படிக்கணுமா? போய் அடுப்பூது, நான்கு வீட்டில் பாத்திரம் கழுவு' என்று அவர் கூற மாணவ, மாணவிகள் பலரும் சிரித்தனர். இது எனக்கு அவமானமாக இருந்தாலும் பரீட்சை எழுதியே தீருவது என்கிற தீர்மானத்துடன் ஹாலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.
அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த தலைமையாசிரியர் நான் வெளியே நிற்பதன் காரணத்தைக் கேட்க, நானும் சொன்னேன். உடனடியாக என்னை அவர் பரீட்சை எழுத அனுமதித்ததுடன் எனக்கான கட்டணம் மற்றும் ரீ - அட்மிஷன் தொகையையும் கட்டினார்.
ஒரே பள்ளியில் ஒரு ஆசிரியர் என்னை அவமானப்படுத்த, இன்னொருவர் என் உயர்வுக்குக் காரணமாக அமைந்தார்.கடைசியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்த நான் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். வேலையில் சேர்ந்து, அதன் பிறகு மேலும் படித்து இன்றுவரை ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
என்னுடைய டீன்-ஏஜில் நான் பெற்ற அவமானங்கள், உதவிகள்.. இந்த இரண்டுமே என் வாழ்வில் நான் உயர காரணமாக அமைந்தன.
இப்போது எனக்கு எழுபதைத் தொடும் வயது. இன்னும்கூட எதையாவது படிக்கிறேன். படிப்பு ஆசை எனக்குக் குறையவேயில்லை.
சிறந்த கேள்வி பதில்கள்
நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது! நியாயத்தைதான் சொல்கிறேன்... எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?
எவருடன் பேசுவதாக இருந்தாலும்... 'வாருங்கள் கலந்து பேசுவோம்' என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! 'உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது' என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!
-------------------------------------------------------------------------------------------------
என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.உங்களது கேள்விக்கு, ஓஷோவே பதில் சொல்லி விட்டார். என் மீது எரிச்சல் எதுவும் இல்லையே!
-----------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன். சுருக்கமாக ஓர் யோசனை சொல்லுங்களேன்...
தனியாக இருக்கும்போது உங்களது எண்ணங்களில் கவனமாக இருங்கள்.
உங்களுடன் மற்றொருவரும் இருக்கும் நேரத்தில் எண்ணம் தவிர சொற்களிலும் கவனமாக இருங்கள்.பலரோடு சேர்ந்து இருக்கும் தருணத்தில்... எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் உயர்வு நிச்சயம்!
Friday, 11 July 2008
SECRET OF LONGEVITY
"I could'nt help noticing how happy you look.What is the secret of your such a long,happy life?"
"I smoke 4packets of cigarettes every day,"she said".
Before I go to bed I smoke a nice big joint.Apart from that ,I drink a whole bottle of wine every week and eat only junk food.
On weekends I pop a huge number of pills and do no excercise at all."
"This is absolutely amazing at your age.How old are you."
Asks the passer
"twenty four." she replies!!!