Saturday 28 February 2009

மார்ச் 7 - இனிய நண்பர் இளங்கோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

மார்ச் 7 - இனிய நண்பர் இளங்கோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்





டியர் Friends
Post all your wishes thru Click Comments link below.


என்றும் அன்புடன் & நட்புடன்

சூரியபிரகாஷ். வா




Thursday 26 February 2009

அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது....

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே.

அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும். இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே

Monday 16 February 2009

பூங்காத்து திரும்புமா....

வரும் சனிக்கிழமை போய் அடுத்த சனிக்கிழமை வந்தால் சிவாவுக்கு 28 வயது முடிந்து 29 பிறக்கிறது. இவன் ஒரு சாஃப்ட்வேர் ஆள். முன் மண்டை ஏறிப்போய் இருக்கும் அவன் தலையில் எண்ணெய் தேய்த்து ரோட்டில் போனால் கிளார் அடிக்கும். ஆனால் என்ன இன்னும் கல்யாணம் தான் ஆகவில்லை. இவனுக்கு இல்லாத வசதி வாய்ப்பா, இல்லை வேலையா? ஆனால் என்ன பண்ணுவது சிவாவின் அம்மாவும் பார்க்காத பெண்கள் இல்லை போகாத ஜோதிடர்கள் இல்லை. ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.
சென்னையில் ப‌க்க‌த்து அப்பார்ட்மெண்டில் இருக்கும் LKG குழ‌ந்தை, அவ‌ன் வீட்டுக்கு வ‌ந்த‌ புதிதில், "அண்ணா , அண்ணா" என்று அழைத்தாள். இப்போதெல்லாம் "ஹ‌லோ அங்கிள்" என்று பாச‌த்தோடு தோளில் தொற்றுகிறாள்.

அந்த‌ மாதிரி அச‌டு வ‌ழியும் ச‌ம‌ய‌ங்க‌ளில், தான் வ‌ய‌தாகி கொண்டிருக்கும் வீரிய‌த்தை உண‌ர்ந்தான். அம்மாவிட‌ம் க‌த்தியும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. நாள‌டைவில் இவ‌னுக்கு இது காம்ப்ள‌க்ஸ் மாதிரி ஆகி பெண்க‌ளுட‌ன் பேசுவ‌தையே த‌விர்த்தான். கூட‌ வேலை பார்க்கும் 22 வ‌ய‌து ந‌ண்டு, சிண்டுக்கெல்லாம் க‌ல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்று ப‌த்திரிக்கை நீட்டும்போது, தார் ரோட்டில் உச்சி வெயிலில் வெறும் காலுட‌ன் ந‌ட‌ப்ப‌து போல‌ ஃபீல் ப‌ண்ண‌ ஆர‌ம்பித்தான்.

இதுவாவ‌து ப‌ர‌வாயில்லை. புதிதாக‌ வேலை பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள், ல‌ஞ்ச் ஹ‌வ‌ரில் கேஷுவ‌லாக‌, "அப்புறம் சார், உங்க‌ளுக்கு எத்த‌னை குழ‌ந்தைங்க‌? வித்யா ம‌ந்திர்ல‌ குழ‌ந்தைக்கு அட்மிஷ‌ன் கார்டு வாங்கிட்டீங்க‌ளா?" என்று கேட்கும்போது "இன்னும் க‌ல்யாண‌மே ஆக‌வில்லை" என்று சொல்லி சாத‌த்தை கொட்டிவிட்டு த‌ம் அடித்து ஆற்றாமையை கொட்டுவான்.
சீக்கிர‌மே ஆஃபிஸில் இருந்து வ‌ந்துவிட்டு, பாகிஸ்தான்‍ வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள். "சிவா, எப்ப‌டிடா இருக்க‌? முத்துராஜ் மாமா தெரியுமா, டே அதாண்டா சாய‌ல்குடில‌ இருக்கிறா என்னோட‌ க‌டைசி தம்பி. ந‌டுவுல‌ கூட பத்து வருஷமா பேசாம‌ ச‌ண்டை போட்டு கெட‌ந்தோமே. அவ‌ன் தான்டா..இன்னிக்கி க‌ல்யாண‌த்துல‌ பாத்தேன். அவ‌ பொண்ணு வ‌ள‌ர்ந்து பெரிய‌ ம‌னுஷி ஆகிட்டாளாம். உன‌க்கு ச‌ம்ம‌த‌மான்னு கேட்டு சொல்ல‌ சொல்றான்டா" என்றாள்.

"அப்பாடா, ஒரு வ‌ழியா சொந்த‌துக்குள்ளேயே முடிஞ்ச‌து" என்று ம‌ன‌சுக்குள் நினைத்துக் கொண்டு, "ச‌ரிம்மா ச‌ந்தோஷ‌ம். நான் இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ர்றேன். போய் பார்க்க‌லாம்" என்று சொல்லி போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டான்.

சாய‌ல்குடி போய் பொண்ணை பார்த்துவிட்டு, மற்ற எல்லா ஃபார்மாலிட்டியும் முடித்துவிட்டு திருப்தியுட‌ன் சென்னை திரும்பினான். இர‌ண்டு வார‌ம் க‌ழித்து ஓர் இரவில் வேலை எல்லாம் முடித்து ஓய்ந்து போய் மெத்தையில் ஷூ பேண்ட் மாற்றாமல் ச‌ரிந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள். "அவ‌ன் கெட‌க்கான் போக்க‌த்த‌ ப‌ய‌. கூப்பிடுற மாதிரி கூப்பிட்டுட்டு அசிங்க‌ப்ப‌டுத்தி விட்டான். ஊரு ஒலகத்துல இவன்தேன் மகராணிய பெத்து வச்சிருக்கானா? செத்தாலும் இனிமே அவ‌ன் மூஞ்சில‌ முழிக்க‌ மாட்டேன். " என்று

சொல்லிக்கொண்டிருக்கும் போது, சிவாவுக்கு அம்மா எதைப்ப‌ற்றி பேசுகிறாள் என்று சொல்லி தெரிய‌வேண்டிய‌து இல்லை. இதே போல் எத்த‌னை முறை பேசியிருப்பாள். போனை வைத்துவிட்டான். மீண்டும் ஒரு அவ‌மான‌ம். எப்போது தூங்கினான் என்றே தெரிய‌வில்லை.

ம‌றுநாள் காலை 11 ம‌ணிவாக்கில் ஆஃபிஸ் போய் சேர்ந்தான். என்ட்ர‌ன்சில் ஆட்டோமேட்டிக் டோர் லாக் அருகில் இருந்த‌ Swiping Machine ல் Swipe ப‌ண்ணினான். "கீ, கீ" என்ற‌ ச‌த்த‌துட‌ன் திற‌க்கவில்லை. Help Desk க்கு கால் ப‌ண்ணினான். அத‌ன் சீஃப், "ஸாரி சார். HR வினோத் சொன்ன‌துனால உங்க‌ளோட ஐ.டிய Deactivate ப‌ண்ணிட்டோம்." என்றான். சிவாவுக்கு அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ புரிந்து வ‌யிற்றைக் க‌ல‌க்கிய‌து. வினோத்திட‌ம் பேசின‌தில் க‌ன்ஃபார்ம் ஆகிவிட்ட‌து. வேலையை விட்டு துர‌த்த‌ப்ப‌ட்டான்.
கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கும்போதெ பொண்ணு கிடைக்க‌வில்லை. இனிமேல் க‌ன‌வில் கூட‌ க‌ல்யாண‌த்தை நினைத்து பார்க்க‌கூடாது என்று முடிவு ப‌ண்ணிவிட்டான். இர‌ண்டு மாத‌த்தில் வேற வேலை தேடி, Airtel நெட்வொர்க் ஆஃபிஸில் Technical Manager ஆகிவிட்டான். ஒரே வார‌த்தில் நாலு வ‌ர‌ன்க‌ள். அவ‌னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. அதில் ஒரு ந‌ல்ல‌ அழ‌கான‌ பெண்ணை பேசி முடித்து, ஒரு மாத‌த்திலேயே க‌லியாண‌மும் முடிந்து விட்ட‌து.

முத‌லிர‌வுக்கு வெயிட் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌த்தில் அவ‌ன் பாதாம்பால் குடித்துக் கொண்டே யோசித்தான். ஒரு கிராமத்து மாமனுக்கு தெரிஞ்சது, எனக்கு தெரியலையே? சாஃப்ட்வேர் கம்பெனியையும், அதுல வேல பாக்குறவங்களயும் நம்பக் கூடாதுன்னு. இன்னும் அதே க‌ம்பெனியில‌ இருந்திருந்தேன்னா, "முத‌ல் ம‌ரியாதை" சிவாஜி மாதிரி "பூங்காத்து திரும்புமா"ன்னு தான் பாடிட்டு இருக்க‌ணும்.

Wednesday 4 February 2009

ஹெச்.ஆர். ரவுண்ட் - பதில் சொல்வது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம். பதில் சொல்வதுதான் கஷ்டம் அப்படின்னு சொல்றது உண்மையா..?


1. உங்களைப்பற்றி சொல்லச்சொன்னா உங்களோட படிப்பு, பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் பற்றி சொல்லிட்டு கச்சிதமா முடிங்க. வீட்ல ஆடு குட்டி போட்டது, கோழி முட்டைப் போட்டது பற்றியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம்.


2. உங்கள் பலம் என்ன என்று கேட்டால் தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு, எடுத்த காரியத்தை சாதிக்கும் துணிவு அப்படின்னு தெளிவான குரல்ல பாயிண்டுகளை எடுத்து வைங்க...


3. நீங்கள் வெற்றியடைந்த விஷயமாக நீங்க செஞ்ச புராஜக்ட்ஸ், கல்லூரியில் நீங்கள் சந்தித்த சவால்கள் போன்றவற்றை சொல்லலாம்.


4.தோல்வியடைந்த விஷயம் பற்றி கேட்டால், ’ரப்பர் பால் கிரிக்கெட் மேட்ச்ல கூட நான் இதுவரைக்கும் தோத்ததே இல்லை தெரியுமா?’னு பீலா விட வேண்டாம். நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்திருந்தால் அதை வெளிப்படையாக சொல்லுங்க. எந்த தவறும் செய்யலேன்னா எந்த முயற்சியும் எடுக்கலேன்னு அர்த்தம். ஒருவேளை எதுவும் ஞாபகம் வரலைன்னா ’அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கலை’ன்னு தன்மையா சொல்லுங்க.


5. நீங்க ஏன் உங்க பழைய நிறுவனத்தில் இருந்து மாறினீங்கன்னு கேட்பாங்க. இந்த கேள்வி ஒரு சீக்ரெட் வெப்பன். வழ-வழ கொழ-கொழ பதில் டோட்டல் டேமேஜ் ஆக்கிடும். தெளிவா, உண்மையா பதில் சொல்லுங்க. நேர்மையான பதில் கண்டிப்பா ஜெயிக்கும். (’ஒரு காரணமும் கிடையாதுங்க. சம்பளம் அதிகம், அதனாலதான் மாறினேன்’ அப்படின்னா தாராளமா அதையும் சொல்லுங்க...)


6. உங்களை நான் ஏன் தேர்ந்தெடுக்கனும் என்ற கேள்விக்கு உங்கள் ஆழ்மனதில் இருந்து பதில் சொல்லணும். (அதாவது ஃபீல் பண்ணி கூவனும்...). பதில் ஒன்னும் சரியா தெரியலைன்னா ’உங்கள் நிறுவனத்துக்கு நான் கடுமையா உழைப்பேன்’. ’இந்த நிறுவனத்தில் பணியாற்றனும்னு ரொம்ப நாளா ஆசை’ அப்படீன்னு வழக்கம்போல பதில் சொல்லி எஸ்கேப் ஆகுங்க. ஓவர் ஆக்ட் பண்ணி கெடுத்துக்க வேண்டாம்.


7. இன்னும் 5 வருஷத்துல நீங்க என்னவா இருப்பீங்கன்னு கேட்டா, ’இந்த கம்பெனிக்கு முதலாளியாகிடுவேன்’னு ஹைட்ரஜன் பாம் போட வேண்டாம். ’ஒரு சீனியர் பர்ஸனா, அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் அறிந்த நிறைகுடமா இருப்பேன்’ அப்படீன்னு சொன்னீங்கன்னா அது பெஸ்ட்.
8. ஒரு நல்ல நிறுவனம் எப்படி இருக்கனும் என்று கேட்டால், இந்த கம்பெனி மாதிரி இருக்கனும்னு சொல்லுங்க. அப்படி இல்லைன்னா அனைத்து ப்ராஸஸ்களும் ஒருங்கே அமைந்த, ஊழியர்களுக்கு மதிப்பு அளிக்கும் நிறுவனம் சிறந்த நிறுவனம் என்று சொல்லலாம் (All systems and processes are well in place, respected employees).


9. முந்தைய கேள்விக்கு அப்புறம் (நல்ல நிறுவனம் கேள்வி), ’எங்களோட நிறுவனத்தில் ஏன் பணியாற்றனும்னு நினைக்கிறீங்க?’னு பட்டுன்னு கேட்பாங்க. இது எதுக்குன்னா ’இந்த பயபுள்ள நம்ம கம்பெனியை ஒரு நல்லவிதமா நினைக்குதா?’னு செக் பண்ண. நீங்களும் ’இது அப்படிப்பட்ட கம்பெனி’ அப்படீன்னு முந்தைய பதிலை மாற்றிச் சொல்லுங்க. இந்த இடத்துல உங்களுக்கு தெரிந்த (நிறுவனம் பற்றிய) நல்ல விஷயங்களையும் சொல்லுங்க.


10. உங்களோட கடுமையான உழைப்பு மதிக்கப்படாமல் போன ஒரு சம்பவத்தை சொல்லுங்கன்னு கேட்டா, அப்படி ஒரு விஷயம் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா ‘இதுவரைக்கும் எப்படி நடக்கலை’னு நேர்மையா சொல்லிடுங்க. நீங்களே திரைக்கதை வசனம் எழுதி உடான்ஸ் விட வேண்டாம்.


11. உங்களோட மற்ற ஹாபீஸ், இண்ட்ரஸ்ட் எல்லாம் என்னன்னு கேட்டா, ’பொதுவா புத்தகம் படிக்கறது’ன்னு சொல்லாதீங்க. (’என்ன புத்தகம் கடைசியா படிச்சே'ன்னு கேட்பாங்க. ‘திருக்குறள்’னு சொல்லி அப்பீட் ஆகவேண்டியிருக்கும்). டி.வி பாக்குறது உங்களோட பொழுதுபோக்குன்னா அதை வெளிப்படையா சொல்லுங்க. உண்மையைச் சொல்றேன்னு ’தூங்குறதுதான் என் ஹாபி’னு சொல்லி இமேஜை டேமேஜ் பண்ணிக்க வேண்டாம்.


12. நிறுவனம் பற்றி தெரிந்ததை சொல்லுங்கன்னு கேட்டா, உங்களுக்கு தெரிந்ததை, கேள்விப்பட்டதை எல்லாத்தையும் சொல்லலாம். ஆனா அது சரியான விவரமான்னு செக் பண்ணிகிட்டு சொல்லனும். இண்டர்வியூவுக்கு முன்னால் அந்த நிறுவன இணையதளத்தை மேய்ந்துவிட்டுச் செல்வது நல்லது.


13. ’உங்களை சம்பளம் இல்லாமல் வேலை செய்யச்சொன்னா செய்வீங்களா’னு கேட்டா, ‘நான் என்ன கேனயனா?’னு நினைக்கிறது தப்பில்லே... அது முகத்துல தெரிஞ்சுடக் கூடாது. ’கம்பெனி விரும்பினால், அது நிறுவத்துக்கு தேவையான ஒன்றாக இருந்தால் செய்வேன்’னு சொல்லுங்க.


14. சனி, ஞாயிறு அலுவலகம் வைத்தால் வருவீங்களான்னு கேட்டா, ‘ஐய்யய்யோ... நான் அரட்டை அரங்கம் பார்க்கனும்’னு, ‘செல்லாத், செல்லாது’னு அனுப்பி வைச்சுருவாங்க. ’நிறுவனத்துக்கும், பணி புரியும் புராஜக்ட்டுக்கும் முக்கியமானதாக இருந்தால் வருவேன்’னு சொல்லுங்க. (பொதுவாக சனி, ஞாயிறு அலுவலகம் வைக்கமாட்டார்கள். இது சும்மா உங்க மனநிலையை தெரிந்து கொள்வதற்கான கேள்வி). அதேநேரம், உங்களுக்கு ஞாயிறுகளில் யோகா வகுப்போ, கராத்தே க்ளாஸோ இருந்தால் அதை சொல்லுங்க. ஒண்ணும் தப்பில்லை.


15.அலுவலங்களில் குழுவாக இணைந்து பணியாற்றுவது மிக முக்கியமான விஷயம். அதனால் குழுவாக இணைந்து பணியாற்றுவது பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு நல்லவிதமா பதில் சொல்லுங்க. ஏற்கெனவே கல்லூரியில், பழைய நிறுவனத்தில் நீங்கள் குழுவாக ஆற்றிய பணிகள்பற்றியும் சொல்லலாம். ’டீம் வொர்க் செய்வதில் நான் பெஸ்ட்’ என்பதை ஹெச்.ஆருக்கு புரிய வைங்க.


16. உங்களுக்கு நிறுவனத்தில் ஏதாவது பிரச்னை என்றால் என்ன செய்வீங்க என்ற கேள்விக்கு ஏதாவது லூஸ் டாக் விட்டா மனோதத்துவ ரீதியில் உங்கள் ’சண்டைக்கோழி’ ஆட்டிடியூட் வெளியே வந்துவிடும். ’நான் பிரச்னை வரும் அளவுக்கு நடந்துகொள்ளும் ஆள் இல்லை’ என்று சொல்லுங்க. அப்படியே பிரச்னை வந்துவிட்டாலும் அதை சம்பந்தப்பட்ட நபருடனேயே பேசி தீர்த்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர் நீங்கள் என்பதை மென்மையாக எடுத்துச்சொல்லங்கள். சினிமாவில்தான் ஹீரோயின்ஸ் ரவுடியை லவ் பண்ணுவாங்க. நிறுவனங்கள் அப்படி இல்லை.


17. ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வீங்க என்ற கேள்விக்கு, ’10 முதல் 12 மணி நேரம்’ என்று சொல்லுங்க. ’பழைய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் தேவை ஏற்பட்டபோது இரவு முழுவது கூட பணிகளை செய்திருக்கிறேன்’ என்று சொல்வது அப்ளாஸை அள்ளித்தரும்.


18. உங்களை நார்த் இண்டியாவுல உள்ள ரிமோட் லொக்கேஷனுக்கு பணி மாற்றம் செய்தா அங்கப்போய் வேலை செய்வீங்களா என்று கேட்டால், ’அண்டார்ட்டிகாவில் கூட பணியாற்றத் தயார்’ என்று சொல்லலாம். நமக்கு தேவை வேலை... அது எங்கேயா இருந்தா என்ன? உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் வீடு, குழந்தை, டாடி, மம்மி என்பது மாதிரி ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லலாம். ‘சென்னையில் இருக்க கம்பெனி நம்மளை என்ன ஆப்பிரிக்காவுக்கா அனுப்பப்போவுது? இதெல்லாம் டம்மி ட்ரிக்ஸ்’ என்று மனதுக்குள் நினைத்து பதில் சொல்லவும்.


19. உங்க குடும்பத்தைப் பற்றி கேட்டா, உங்களோட குடும்பம் பற்றி மட்டும் பதில் சொல்லுங்க. சித்தப்பா, பெரியப்பா, எதிர்வீட்டு ப்ளூ சுடிதார் பொண்ணு பற்றியெல்லாம் சொல்ல வேண்டாம்.


20. நீங்க ஏதாவது கேட்க விரும்பறீங்களான்னு கேட்டா மனதில் தோன்றியதை/ உங்கள் பணிக்கு சம்பந்தமானதை கேளுங்க. ’ஐநாக்ஸ்ல என்ன புதுப்படம் என்ன ஓடுது?’ங்குற மாதிரி தேவை இல்லாத விஷயத்தையும், ’இண்டர்வியூவுல நான் பாஸ் ஆனேனா இல்லையான்னு இப்பவே சொல்லுங்க’ன்னு விரும்பத்தகாத விஷயத்தையும் கேட்க வேண்டாம்.
சில செக் பாய்ண்ட்ஸ் பார்க்கலாம்.


* கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்க. வளவளன்னு பேச வேண்டாம். ’அமைதி ஓர் ஆயுதம். அதை குலைக்கும்போது நீங்கள் அந்த ஆயுதத்தின் வலிமையை இழந்துவிடுகிறீர்கள்’ அப்படீன்னு ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.


* தெளிவாகவும், முழுமையாகவும் பேசுங்க. சரளமான ஆங்கிலம் கண்டிப்பாக உதவும்.


* எந்த நேர்முக தேர்விலும் முதல் 15 நிமிடங்கள் முக்கியமானது. இந்த நேரத்திற்குள் நிகழும் கேள்வி, பதில்களில் நீங்கள் சரியான பதில்களை சொல்லியிருந்தால், அதன் பிறகு தேர்வாளர்கள் கேள்விகளை கேட்டுவிட்டு அவர்களே பதில்களையும் சொல்லிவிடுவார்கள். இதை நான் பல நேர்முகத் தேர்வுகளில் கவனித்திருக்கிறேன்.


* நேர்முகத் தேர்வுக்குப் போகும்முன்பு அந்த நிறுவனம் பற்றி அதன் இணையதளத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளுதல் கண்டிப்பாக உதவும். நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து வைத்திருந்து, அதை தேவையான இடத்தில் உபயோகப்படுத்துங்க.


வெற்றி உங்களுக்கே!