Thursday 30 July 2009

'what is it?' என்ற குறும்படம். ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம்

படம் ஒரு வீட்டுத் தோட்டத்தில் துவங்குகிறது. புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்ச்சில் வயதான அப்பாவும் அவரது மகனும் உட்கார்ந்துஇருக்கிறார்கள். மகன் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறான். அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம். புல்வெளியைப் பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக் கிளையில் உட்காருகிறது. அதை அப்பா கவனமாகப் பார்க்கிறார். குருவி தாவிப் பறக்கிறது. அது என்னவென்று மகனிடம் கேட்கிறார். அவன் குருவி என்று சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறான். அவர் மறுபடியும் அதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அது என்னவென்று கேட்கிறார்.

அவன் குருவி என்று அழுத்தமாகச் சொல்கிறான். இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது. அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார். மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவிப்பா. கு... ரு... வி...' என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான். குருவி ஒரு கிளை நோக்கிப் பறக்கிறது. அப்பா மறுபடி கேட்கிறார்... அது என்ன? மகன், ''குருவி... குருவி என்று எத்தனை தடவை சொல்வது? உங்களுக்கு அறிவு இல்லையா?'' என்று கோபத்தில் வெடிக்கிறான். அப்பா மௌனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ''உரக்கப் படி'' என்கிறார். அவன் சத்தமாகப் படிக்கிறான்.

'என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்துப் போனேன். அங்கே ஒரு குருவி வந்தது. அது என்னவென்று பையன் கேட்டான். குருவி என்று பதில் சொன்னேன். அவன் அதை உற்றுப் பார்த்துவிட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான். நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன். திருப்திஅடை யாத என் மகன் 21 முறை அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தான். நான் எரிச்சல் அடையாமல், கோபம்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் சந்தோஷமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டேன்!' என்று அந்த டைரியில் உள்ளது.

டைரியைப் படித்து முடித்த மகன், அப்பா போல ஏன் பொறுமையாகத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல, அப்பாவின் தலையைக் கோதி அவரைக் கட்டிக் கொள்கிறான். அத்துடன் படம் முடி கிறது.

Monday 27 July 2009

நட்பு....

உண்மையான நண்பன் என்பவன் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவன். அதன் பிறகும், முன்பை போலவே உங்களிடம் பிரியமாக இருப்பவன்.

பொதுவாக நண்பர்களுக்கு மத்தியில் விமர்சனங்களை தாங்கும் மனோபாவம் குறைவாகவே இருக்கின்றது. மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் செய்கிற தவறுகள் ஏராளம். உரிய நேரத்தில் அதை அறிந்து சரி செய்யாமல் விடும் போது அதற்காக விலை மதிக்க முடியாத நட்பை இழக்க வேண்டியும் வருகிறது.

விமர்சனம் செய்பவர் நாகரிகமாக தன் கருத்தை நண்பருக்கு சொல்லும்போது, அதை அதே முறையில் அவரும் அணுகி ஏற்று கொள்ளும்போது ஒரு ஆரோக்கியமான நட்பு வளருகிறது. இதில் கருத்தை சொல்லும் விதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதே சமயம் , கடுமையான வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்க படவேண்டும். நண்பருக்கு அவருடைய தவறை சுட்டி காட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்தி அவர் மனதை நோகடிக்கக்கூடாது.

மனமென்பது விளைச்சல் நிலம். நீங்கள் அதில் விதைக்கும் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எந்த அளவு, மகிழ்ச்சியான, சந்தோசமான உணர்வுகளை விதைகிறேர்களோ அந்த அளவுக்கு சுவையான பழங்கள் கிடைக்கும்.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ். வா

Sunday 26 July 2009

என் அவசரம்....

பொதுவாக சனிக்கிழமை தோறும் நானும் என் மனைவியும்

(Shopping) கடைக்கு சென்று அடுத்த வாரத்துக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்குவது வழக்கம்.

நேற்று நாங்கள் கிளம்பும் பொது, என் மனைவி சொன்னா, ஏங்க இங்க தான் (Swine Flu) பன்றி காய்ச்சல் இருக்கே, வெளியே போகும்போது நாம ரெண்டு பேரும் முகத்துக்கு Mask போட்டுக்கலாம்னு சொன்னா. நான் சொன்னேன் அதெல்லாம் நமக்கு வராது, இந்த மாதிரிஎல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி Taxi இல் ஏறி சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு லேசான சாதாரண இருமல் வந்தது.

வண்டி ஒட்டிகிட்டிருந்த டிரைவர் திடீரென்று பதட்டமாகி அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு Mask எடுத்து அணிந்து கொண்டான். நான் என் மனைவிக்கிட்ட சொன்னேன், பாரு உனக்கு காய்ச்சல் இருக்குமோனு நினைத்து அவன் Mask மாட்டிகிட்டான்.

என் மனைவி உடனே டென்ஷன் ஆகி என்னை முறைத்தால். பொதுவாக Mask போடுவதை அசிங்கமா நினைக்காம, நம்முடைய பாதுகாப்புக்காக போடறது நல்லது தானே.

கடைக்கு சென்றவுடன் என் மனைவி ஒரு தடவைக்கு நாலு தடவை விலை எல்லாம் சரி பார்த்து எல்லா தேவையான பொருட்களையும் வாங்கிகிட்டு பணம் செலுத்த சென்று கொண்டிருக்கும் பொது

ஒரு தொலைகாட்சியில் மைக்கல் ஜாக்சன் பாட்டும் நடனமும் சென்று கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாக அந்த கடை ஊழியரிடம் அந்த (DVD ) கேசெட் விலையை கூட விசாரிக்காமல் வாங்கி விட்டேன். பின்னர் தான் தெரிந்தது அதன் விலை 400 பாட் என்று. கிளம்பும்போது இதை கவனித்து விட்ட என் மனைவி அதிர்ச்சியாகி, ஏங்க எப்படி பணத்த தேவை இல்லாம செலவு பண்றிங்க என்று ஆரம்பித்து ஒரு சில நிமிடத்தில் நான் இதுவரைக்கும் என்ன என்ன தேவை இல்லாம செலவு செஞ்சேன் என்பதை எல்லாம் வரிசை படுத்தி சொல்ல அரம்பித்து விட்டால்.

எனக்கும் வாங்கின பிறகு தான் தெரிஞ்சது விலை கொஞ்சம் அதிகம் தானோ என்று. சில நிமிட மௌனத்திற்கு பிறகு, நான் சொன்னேன், கொஞ்சம் அவசர பட்டுடேனோ, பின்னர் இருவரும் அந்த காசெட்டை திருப்பி கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த மாதிரி தெரியாம அவசர படர நேரத்தில் நம்ம கூட யாராவது இருந்து அடிக்கடி சரி பண்ணிகிட்டே இருக்க வேண்டியிருக்கு.

மீண்டும் சிந்திப்போம்.

- சூரியபிரகாஷ். வா

Friday 24 July 2009

என் வெற்றி - 1....

சில சமயம் வாழ்க்கை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் போற மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப மெதுவா, அமைதியாகவும் பொய் கொண்டிருக்கும். இதுக்கெல்லாம் நம்ம மனசு, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற சூழ்நிலைகள் காரணமா அமைகிறது.

கடந்த மூன்று வாரமா ஞாயிற்றுகிழமை கிரிக்கெட் விறுவிறுப்பாகவும், நண்பர்களிடையே மிகுந்த உற்சாகமாகவும் பொய் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஆட்டங்களின் பொது ஒரு அணி முன்னிலை பெறுவதும், மற்றொரு அணி பின் தங்குவதும் இயற்கை. மறுபடியும் பின் தங்கிய அணி முன்னிலை பெரும்.

வாழ்க்கை ஒரு வட்டம், இதுல தோற்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோற்பான் - இந்த வசனம் திருமலை படத்துல நடிகர் விஜய் சொன்னது.

வெற்றி தோல்விய சாதரணமாக எடுத்துக்கொளும் பாங்கு எல்லாருக்கும் எளிமையா வந்துடும்னு எதிர்பார்க்க முடியாது. வெற்றி பெறும்போது என்னால தான் இன்னிக்கு என் அணி வெற்றி பெற்றதுன்னு பெருமைய சொல்லற நிறைய பேர். அவங்க அணி தோற்கும் போதும் அதுக்கு தன்னை காரணமா சொன்னதா சரித்திரமே கிடையாது.

என் பத்தாவது வயதிலிருந்து நான் கிரிக்கெட் ஆடிகிட்டு வருகிறேன். அப்போதிலிருந்து நான் நிறைய தோல்விகளையும், குறைந்த வெற்றிகளையும் தான் சந்தித்திருக்கிறேன். சில நேரங்களில் என்னாலேயே சில ஆட்டங்களை தோற்றிருக்கிறோம். முக்கியமான நேரத்தில் கேட்ச் தவற விட்டு விடுவேன். அதிக ரன் எடுத்து ஜெய்க்க வேண்டிய ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகிவிடுவேன். எதிர் அணி ஆறு பந்துகளில் பத்து ரன் எடுக்க வேண்டிய நிலையில் நான் பந்து வீசினால், எதிர் அணி எளிமையாக அந்த பத்து ரன்னை எடுத்து எங்கள் அணி தோற்கும்.

ஆட்டத்தின் வேறு சில போக்குகளாலும், இதர நண்பர்களுடைய மிக சிறிய தவறுகளும் இந்த தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ஆட்டம் முடிந்து நண்பர்களுக்கு இடையேயான விவாதத்தில் ஒவ்வொருத்தனும் என்னை நோக்கி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு, என்னால தான் அன்றைய ஆட்டம் தோற்றதாக உறுதி படுத்தி விட்டு செல்வார்கள்.

இதே போல சில நேரங்களில் நான் அதிக ரன் எடுத்துஅல்லது விக்கெட் வீழ்த்தி என் அணி வெற்றி பெறும்போதோ, நண்பர்கள் விவாதம் இன்றைய ஆட்டம் சிறப்பாக இருந்ததற்கு எல்லோரடைய உழைப்பும், முயற்சியும் இருந்ததாக சொல்லி முடிக்கப்படும். (நெருங்கிய நண்பர்கள் வாழ்த்து மட்டும் இருக்கும்).

இதெல்லாம் எனக்கு மட்டும் ஏற்பட்ட , வாழ்க்கையில் நடந்த அனுபவமாக இருக்க முடியாது. எல்லா விளையாட்டு வீரனும் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கிற அனுபவங்கள் தான்.

என் அனுவத்திலிருந்து நான் கற்றது, வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்க வேண்டும். வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், தோல்வியுறும்போது துவண்டு விடுவதும் நல்லதல்ல.

ஜெயித்தால் நல்லது! தோற்றால் அதை விட நல்லது! . தோல்விகள் தான் மனிதனை அடுத்த கட்ட வெற்றிக்கு வலிமையாக கொண்டு செல்கிறது.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ்.வா

இன்று ஒரு குறள்....

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் - குறள்


குறள் விளக்கம்:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமேவேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

Saturday 11 July 2009

உண்ணாவிரதம்....

இந்தியாவைப் பொறுத்தவரை, உண்ணாவிரதம்என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இந்தஉண்ணாவிரதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்கள்மத ரீதியான காரணங்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறார்கள். ஆனால், மருத்துவ ஆலோசனையுடன் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்றவிஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால்50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்குஇணையானது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்புபோதுமானது.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால், உடனடியாகஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல்சில நாட்கள் மிகக் கடுமையானவை. இந்த நாட்களில்பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்துவாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல்இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணா நோன்பு தொடரும்போதுஇந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும்அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.

கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் இருக்கிறது.உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும்பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

சாப்பிடாமல் இருப்பதால்என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.அதனால்,ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.

3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.

4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.

5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.


6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறதுமூளை.

மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பதுஅந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள்இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.