Wednesday 31 December 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009


பிச்சை புகினும்.. - பத்மா, பெங்களூரு (நன்றி: அவள் விகடன்)

அது 1952-ஆம் வருடம். நான் பள்ளியிறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வசதியானவர்கள் மட்டும்தான் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். என் குடும்பம் வறுமையில் உழன்றதால் என்னால் மாதாமாதம் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழல். இருந்தாலும் புத்தகம், நோட்ஸ் என்று எல்லாவற்றையும் இரவல் வாங்கிப் படித்து, முதலிடம் பிடித்து விடுவேன்.
இப்படிப்பட்ட சூழலில் எனது பள்ளிக் கட்டணத்தை ஊர்ப் பெரியவர் ஒருவர் தானே கட்டுவதாகக் கூறி, என்னைப் படிக்க வைத்தார். ஒருமுறை அவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் பணம் கட்டவில்லை.
அப்போது 'ப்ரீ ஃபைனல் எக்ஸாம்' நடந்து கொண்டிருந்தது. பரீட்சைக்குப் பணம் கட்டாததால் எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர் என்னை பரீட்சை எழுத அனுமதிக்க மறுத்துவிட்டார். அதோடு, 'இப்படி யாசகம் எடுத்துப் படிக்கணுமா? போய் அடுப்பூது, நான்கு வீட்டில் பாத்திரம் கழுவு' என்று அவர் கூற மாணவ, மாணவிகள் பலரும் சிரித்தனர். இது எனக்கு அவமானமாக இருந்தாலும் பரீட்சை எழுதியே தீருவது என்கிற தீர்மானத்துடன் ஹாலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.
அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த தலைமையாசிரியர் நான் வெளியே நிற்பதன் காரணத்தைக் கேட்க, நானும் சொன்னேன். உடனடியாக என்னை அவர் பரீட்சை எழுத அனுமதித்ததுடன் எனக்கான கட்டணம் மற்றும் ரீ - அட்மிஷன் தொகையையும் கட்டினார்.
ஒரே பள்ளியில் ஒரு ஆசிரியர் என்னை அவமானப்படுத்த, இன்னொருவர் என் உயர்வுக்குக் காரணமாக அமைந்தார்.கடைசியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்த நான் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். வேலையில் சேர்ந்து, அதன் பிறகு மேலும் படித்து இன்றுவரை ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
என்னுடைய டீன்-ஏஜில் நான் பெற்ற அவமானங்கள், உதவிகள்.. இந்த இரண்டுமே என் வாழ்வில் நான் உயர காரணமாக அமைந்தன.
இப்போது எனக்கு எழுபதைத் தொடும் வயது. இன்னும்கூட எதையாவது படிக்கிறேன். படிப்பு ஆசை எனக்குக் குறையவேயில்லை.

சிறந்த கேள்வி பதில்கள்

நான், யாரிடம் பேசினாலும் சண்டையில் போய் முடிகிறது! நியாயத்தைதான் சொல்கிறேன்... எனினும் எவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை! என்ன செய்வது?

எவருடன் பேசுவதாக இருந்தாலும்... 'வாருங்கள் கலந்து பேசுவோம்' என்று உரையாடலுக்குத் தயாராகுங்கள். எதிர் தரப்பினரின் நியாயத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! 'உரையாடல் என்பது இருவழிப் பாதை; எதிர்ப் பக்கத்தில் இருந்தும் பயணம் அனுமதிக்கப்படுகிறது' என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மாறாக, விவாதத்துக்கு அழைப்பு விடாதீர்கள். அது சண்டையில் முடியலாம். உரையாடல்- நட்புக்கு வழி வகுக்கும். விவாதம்- பகைமைக்கு வாசல் திறக்கும்!

-------------------------------------------------------------------------------------------------

என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன. தப்பிக்க வழி சொல்லுங் களேன்?

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.உங்களது கேள்விக்கு, ஓஷோவே பதில் சொல்லி விட்டார். என் மீது எரிச்சல் எதுவும் இல்லையே!

-----------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்புகிறேன். சுருக்கமாக ஓர் யோசனை சொல்லுங்களேன்...

தனியாக இருக்கும்போது உங்களது எண்ணங்களில் கவனமாக இருங்கள்.
உங்களுடன் மற்றொருவரும் இருக்கும் நேரத்தில் எண்ணம் தவிர சொற்களிலும் கவனமாக இருங்கள்.பலரோடு சேர்ந்து இருக்கும் தருணத்தில்... எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் உயர்வு நிச்சயம்!

Friday 11 July 2008

SECRET OF LONGEVITY

A passer by noticed an old lady sitting on her front step.

"I could'nt help noticing how happy you look.What is the secret of your such a long,happy life?"

"I smoke 4packets of cigarettes every day,"she said".

Before I go to bed I smoke a nice big joint.Apart from that ,I drink a whole bottle of wine every week and eat only junk food.

On weekends I pop a huge number of pills and do no excercise at all."

"This is absolutely amazing at your age.How old are you."
Asks the passer

"twenty four." she replies!!!

உடல் நல குறிப்புகள்

Health Tips

1. While taking bath, it is better to use warm water. Hot water or cold water may cause some problems later, hot water bath during rainy days may give temporary relief, similarly cold water bath during summer may be pleasant at that time but extreme hot and severe cold water will create health dis-orders later. Warm water will be helpful during all seasons. Water should never be poured first on the head, it should be started with leg and step by step it should be brought to head.

2. During holidays, some people take bath after taking some food. This may cause some cramp in stomach and not advisable, so it is better to eat after taking bath or may be after 30 minutes after eating some thing.

3. Breakfast should be a balanced diet with all nutritional items, skipping the breakfast or having some junk food liek pizza etc., for breakfast should be avoided.

4. Lunch should be taken at regular times, atleast some biscuits may be taken if the lunch is delayed. Substituting with Coffee or Tea will increase acidity in the stomach and the body may not absorb lunch if taken late or after Tea or Coffee.

5. Daily one fruit like banana will help to improve the body immune system to fight against various diseases. Skin becomes shiny if papaya and banana fruits are taken regularly. It can also cure for constipation issues. Fruits remove toxic elements in the body so people who take fruits as part of their diet look younger than those who do not take it. 6. Dinner should be as light as possible. Digestion load is reduced and it helps the brain to rejuvenate other organs if the digestion job is completed. It is always better to finish dinner well before 3 hours of hitting the bed.

Diet Tips

1. Lot of people would like to stay slim, maintaining fitness after the age of 40 is more important to fight against several diseases. It is better to switch over to Sugar free substitutes instead of sugar.

2. Non-veg eating should be avoided or atleast reduced after the age of 50.

3. Regular walking is a must. It must be a brisk one.

4. Regular master health checkup may be done once in a year and BP must be checked at regular intervals.

5. Avoid taking snacks or any food items while watching TV, one may not know, how much he is eating if mind is concentrating on TV serials while eating. This will add extra fat in the body and will increase obesity.

6. Food must have enough fibre content to increase stamina and must include green leaves every day.

7. Plenty of Water should be taken, may be on an average 8 Litres/day. This will reduce stone formation in kidney as well as improve skin beauty as constipation is avoided. Diabetic patients may take fruit juices in consultation with doctors as the sugar content of the fruits may increase sugar problems.

8. Milk may be taken in place of Tea or Coffee after the age of 50.

Tuesday 3 June 2008

கழுகார், ஜூனியர் விகடன் ஜூன் 15, 2058 இதழில்

சேது திட்டம் நிறைவேறலையே? கருணாநிதி ஆதங்கம்!!

சென்னை, ஜூன் 3 : இந்த ஆண்டாவது சேதுசமுத்திர திட்டம் நிறைவேறினால் மகிழ்ச்சியடைவேன் என்று தனது 135வது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாகப் பேசினார். தான் இருநூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் அன்றாவது இத்திட்டம் நிறைவேறுமா என்று உணர்ச்சிவசப்பட்டு முதல்வர் பேசியபோது திமுகவினர் துரைமுருகன் தலைமையில் ஒப்பாரி வைத்தார்கள்.திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் 135வது பிறந்தநாள் கோலாகலமாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்தது போல ஏழை மக்களுக்கு இலவச கம்ப்யூட்டர் தந்தோம். ஒவ்வொரு தமிழனுக்கும் நிலாவில் அரை ஏக்கர் நிலம் தரும் திட்டமும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் இன்னமும் தமிழர்களின் இருநூறு ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப் படவில்லையே? என்று முதல்வர் சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த வாழும் வள்ளுவன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.இந்த பிறந்தநாள் விழாவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

* - * - * - * - * - * - *
சுவாமி வம்பானந்தா, குமுதம் ரிப்போர்ட்டர் ஜூன் 18, 2058 இதழில்:

”கலைஞரின் பிறந்தநாளுக்கு முன்னதாக பொதுக்குழு நடந்ததே? அதில் என்ன பேசினார்கள் சாமி?”“இன்னமும் ஸ்டாலினுக்கு தகுந்த வயது வராததால் அவரை முதல்வராக்கும் திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப் போட்டிருப்பதாக கலைஞர் பேசினாராம். 104 வயசாயிடிச்சி, இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் உள்ளாட்சி அமைச்சராகவே இருப்பது என்று விரக்தியடைந்துப் போன ஸ்டாலின் மெசபடோமியாவுக்கு அரசுமுறை பயணமாக யாருக்கும் சொல்லாமல் கோபமாக கிளம்பிப் போய்விட்டாராம்

* - * - * - * - * - * - *
கலைஞருக்கு ஓய்வு கொடுங்கள்! - ஞாநியின் “ஓ” பக்கங்கள்!”

135 வயது ஓய்வு பெறும் வயதா இல்லையா என்று நாம் சிந்திக்க வேண்டும். 104 வயதான ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கலைஞர் காசி, இராமேஸ்வரம் என்று சென்று பெரியாரின் சிந்தனைகளை மக்களிடையே விதைக்க வேண்டும். கலைஞரால் மட்டும் தான் இது முடியும்”இவ்வாறாக குமுதம் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஞாநி “ஓ” பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

* - * - * - * - * - * - *
எப்போதான் ஆட்சிக்கு வருவது? விஜயகாந்த் விரக்தி!!

வேலூர், ஜூன் 5 : கட்சி ஆரம்பித்து ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் நூற்றி மூணு வயது ஆகிறது. பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கோ நூற்று இருபது வயது ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வர மக்கள் ஓட்டு போடவேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கடந்த தொண்ணூறு ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை கண்ட மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் என்னை மக்கள் முதல்வராக்குவார்கள் என்று பேசினார்.

* - * - * - * - * - * - *
“திமுக பொதுச்செயலாளரான அன்பழகன் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். 137 வயதுதானே ஆகிறது? இதெல்லாம் ஓய்வு பெறும் வயதா? இன்னமும் பதினைந்து ஆண்டுகள் கழித்து ஓய்வு பற்றி யோசிக்கலாம் என்று கலைஞர் சொன்னாராம். இதனால் தன் ஓய்வு குறித்த யோசனையை தள்ளிப்போட்டிருக்காராம் பேராசிரியர்”. நாம் வைத்த பீரை சிப் செய்தபடியே சொன்னார் கழுகார்.

எங்கே போனது என் அல்வா துண்டு?

புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம்.

ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!”ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது. நால்வரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இனி ஜீவனத்துக்கு என்ன செய்வது என்று தலைமீது கை வைத்து உட்கார்ந்துவிடுகிறார்கள்.

வாசு - அரி இரு எலிகளும் இனிப்புக்கடையின் வேறு அறை எதிலாவது அல்வாத்துண்டுகள் கிடைக்கும், தேடிப்பார்த்து சாப்பிடலாம் என்று தங்கள் தேடலை ஆரம்பிக்கின்றன. அச்சுபிச்சுவும், விவேக்கும் இந்த அறையிலேயே யாராவது இனிமேல் வந்து அல்வாத்துண்டுகளை அடுக்குவார்கள், அப்போது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அறையிலேயே தவம் கிடக்கிறார்கள்.

“எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!”பல அறைகளில் இடைவிடாது தேடி ஒன்பதாவது என் அறையில் வேறுரக அல்வாத்துண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை வாசுவும், அரியும் காண்கிறார்கள். தங்கள் தேடுதலுக்கு பலன் கிடைத்தது குறித்து மகிழ்கிறார்கள்.

இங்கே அல்வாத்துண்டு காலி ஆனாலும் கூட அடுத்த தேடலுக்கு மனதளவில் ஆயத்தமாகிறார்கள். மாறாக ஆறாம் எண் அறையில் தங்கிவிட்ட அச்சுபிச்சு - விவேக் கோஷ்டி பட்டினியில் வாடுகிறது. புதிய அல்வாத்துண்டுகளை தேடுவதற்கு எந்த முனைப்பும் காட்டாமல் சோம்பேறித்தனமாக நாட்களை கடத்துகிறது.

“நீ மாறவில்லையெனில் சுவடுகளே இல்லாமல் அழிந்துப் போவாய்!”நீண்டநாட்களாக உணவில்லாமல் வாழும் அவலநிலை அச்சுபிச்சுவையும், விவேக்கையும் சூழ, புதிய அல்வாத்துண்டுகளை தேடுவோம் என்று விவேக் ஆலோசனை கூறுகிறான். புதிய அல்வாத்துண்டை தேட தான் தயாரில்லை, புதியதாக கிடைத்தாலும் அது ஏற்கனவே கிடைத்த அல்வாத்துண்டுக்கு இணையாகாது என்று கூறி அச்சுபிச்சு அந்த ஆலோசனையை நிராகரிக்கிறான்.

வேறுவழியில்லாமல் தனியாக தன் தேடுதலை தொடங்குகிறான் விவேக். பலமணி நேர அயராத தேடுதலுக்குப் பின்னரும் அவனால் அல்வாத்துண்டுகளை கண்டறிய இயலாததால் மனக்கிலேசம் அடைகிறான். எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கிறான். “நீ பயப்படவில்லையெனில் என்னவெல்லாம் செய்திருப்பாய்?”இருப்பினும் தன்னால் எப்படியாவது அல்வாத்துண்டுகளை கண்டறிந்து வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையை தனக்கு தானே வளர்த்துக் கொள்கிறான்.

இதுவரை அவன் தேடாத புதிய இடங்களை தேடுகிறான். எந்தவொரு வாய்ப்பையும் அவன் தவறவிடுவதாக இல்லை. கண்ணில் பட்ட வழியிலெல்லாம் பயணிக்கிறான். பலநாட்களாக சோம்பேறித்தனமாக, உல்லாசமாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அயராத தேடுதலில், உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை கண்டறிகிறான். “பயத்தை தகர்த்து! முன்னேறுதலில் நீ சுதந்திரமாக உணர்வாய்!”

ஒருவாறாக ஏற்கனவே வாசுவும், அரியும் கண்டறிந்த அல்வாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்பதாவது எண் அறையை கண்டறிகிறான் விவேக். வாசுவும், அரியும் இவனை மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். பலநாள் பசி தந்த களைப்பும், ஓயாத உழைப்பு தந்த சோர்வும் காரணமாக ஏராளமாக உண்கிறான் விவேக். ஆறாம் எண் அறையில் அல்வாத்துண்டுகள் காலியான போதே தன் தேடுதலை ஆரம்பித்திருந்தால் இவ்வளவு அலைச்சல் ஏற்பட்டிருக்கிறாது என்பதை நினைத்துப் பார்க்கிறான். “எவ்வளவு சீக்கிரமாக பழசை உதறுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக புதுசு கிடைக்கும்!”தன் நண்பன் அச்சுபிச்சுவும் இந்த அறைக்கு வந்தால் நன்றாக இருக்கும், அவன் வருவானா என்று ஏங்குகிறான் விவேக். இந்த அறையில் இருக்கும் அல்வாத்துண்டுகளும் ஒருநாள் திடீரென காணாமல் போகும்.

அப்போது தன் அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகவேண்டும் என்று மனதளவில் உறுதிகொள்கிறான். எதுவுமே நிலையானதல்ல, மாற்றங்கள் வருவதும், அதனால் விளையும் விளைவுகளை எதிர்கொள்வதும் தான் வாழ்க்கை என்பதை உணர்கிறான். “சிறிய மாற்றங்களை முதலிலேயே கண்டுபிடித்து விடுவது, பின்னால் வருகிற பெரிய மாற்றங்களுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் உதவும்” என்ற அறிவுரையோடு முடிகிறது இந்த நாற்பத்தியெட்டு பக்க புத்தகம்.நூல்

வெளியீடு : அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. விலை : ரூ.15. இந்நூலின் மூலம் ஆங்கிலத்தில் பல லட்சம் பிரதிகள் விற்ற 'WHO MOVED MY CHEESE' என்ற புத்தகம். கே.ஆர். மணி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

இப்புத்தகத்தில் அல்வாத்துண்டு என்பது வாய்ப்புகளை உருவகப்படுத்துகிறது. எலி, சிறிய மனிதர்கள் என நான்கே நான்கு கதாபாத்திரங்களை வைத்து மிக எளிய மொழியில் கனமான விஷயங்களை சொல்ல பயன்படுத்தும் உத்தி புதிது. இவ்வகை எழுத்துக்களை 'நெம்புகோல் எழுத்துக்கள்' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வாசிக்க குழந்தைகளுக்கான இலக்கியம் போல தோற்றமளித்தாலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வாய்ப்புகள் குறித்த அவசியத்தை பெரியவர்களுக்கு போதிக்கிறது.

குளமாய் தேங்கிக் கிடக்கும் நீர் கோடை வந்தால் வற்றிவிடும், ஆறாய் ஓடும் நீரோ கடலில் கலந்து சாகாவரம் பெறும். நாம் குளத்து நீராய் வாழப்போகிறோமா, இல்லை ஆற்றுநீராய் வாழப்போகிறோமா? என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடமே இருக்கிறது. தொடர்ச்சியாக இயங்கி, அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஆற்றுநீரைப் போல நம்மை தயார்செய்து வைப்பதின் மூலம் மட்டுமே நம் காலத்துக்கு பிறகும், நம்மைப் பற்றிய நினைவலைகளை மட்டுமாவது உலகில் வாழவைக்க முடியும் என்பது நிதர்சனம்.

மாற்றங்களுக்கு தயாரில்லாத மனிதனும், சமூகமும் வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, எதிர்காலத்தில் தனக்கென ஏராள வாய்ப்புகளை தன்முனைப்போடு ஏற்படுத்துகிறவனே வரலாற்றில் இடம்பெறுகிறான்.

Friday 23 May 2008

எவ்ளோ சம்பளம்?

பொம்பளைங்க கிட்ட வயசைக் கேக்காத, ஆம்பளைங்ககிட்ட சம்பளம் எவ்ளோன்னு கேக்காத’-ன்னு ஏதோ ஒரு சினிமால மனோரமா ஆச்சி ஒரு வசனம் பேசறமாதிரி ஒரு ஞாபகம். ஆம்பளைங்க வாங்கற சம்பளம் ஒரு ப்ரைவசியான விஷயம். ஆனா எது ப்ரைவசியான விஷயமோ அதை தெரிஞ்சுக்கறதுல மக்களுக்கு ஆர்வம் அதிகமாய்டுது. சிலபேரு ‘என்ன சம்பளம் வாங்கறீங்க’-ன்னுகேக்கறதுக்கு ரொம்ப கூச்சப்படுவாங்க. சிலபேரு, ‘உங்க பேரு என்ன?’-ன்னு கேக்கறமாதிரி சதாரணமா கேப்பாங்க. ‘பையன் என்ன சம்பளம் வாங்கறாரு’-ன்னு பொண்ண கொடுக்கறவங்க கேட்டா ஒரு நியாயம் இருக்கு. வர்ற பதில் உண்மைதானா-ன்னு ஆட்களை வெச்சு சரிபார்க்கவும் உரிமை இருக்கு. ஆனா, பஸ்ல பக்கத்துல உக்காந்து பயணம் செய்யறவர்ல இருந்து எல்லோருக்கும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் என்னன்னா அது நாம வாங்கற சம்பளம்தான்.

‘இவன் கிட்ட எவ்ளோ டொனேஷன் வாங்கலாம்’-ன்னு கணக்கு போடறதுக்கு, ‘இவன் ஏதாவது லஞ்சம் கொடுப்பானா?’-ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு, ‘இவன் வாங்கற சம்பளத்தைவிட நம்ம அதிகமா வாங்கறோமா’-ன்னு சுய அனாலிஸிஸ் பண்றதுக்கு, இப்டி பல காரணங்களுக்காக இந்தக் கேள்வி தினமும் கேட்கப்பட்டுகிட்டுதான் இருக்கு.

என் அம்மாவோட வங்கிக் கணக்கு விஷயமா ஊர்ல இருக்குற ஒரு வங்கி-க்கு போயிருந்தேன். அதிகமா சனி, ஞாயிறு ரெண்டு நாள்தான் கிராமத்துல இருக்கோம்-ங்கறதுனால, சனிக்கிழமை காலைல வங்கிக்கு போனேன். ‘சில டாக்குமெண்ட்டுகளை சரி பார்க்க கும்பகோணம் ப்ராஞ்ச்சுக்கு நீங்க போகணும், சார்.’-ன்னு சொல்லி பக்கத்து பெரிய கிளைக்கு அனுப்பினாங்க. ‘இவர் உங்களை கூட்டிகிட்டு போவார் சார்’-ன்னு கூடவே வங்கி உதவியாளர் ஒருத்தரை அனுப்பினாங்க.‘சார், போலாமா சார், வண்டீல வந்தீங்களா’-ன்னு உதவியாளர் தயாரானார்.‘ஆமா சார்’-ன்னு கூட்டிகிட்டு கிளம்பினேன்.‘வண்டி புதுசா சார்?’-ன்னு ஆரம்பிச்சார்.‘ஆமா சார், என் மாமனார் வண்டி’‘ஓ உங்களுக்கு வாங்கி கொடுத்ததா?’‘இல்லை. அவரோடது, திரும்பப் போயி கொடுத்துடணும்’‘பேங்க்ல எல்லா வேலையும் என் தலைலதான் சார். நம்ம அளவுக்கு யாருக்கும் அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இல்லை. எல்லாம் படிச்சுட்டு புதுசு புதுசா வர்றாங்க. கம்ப்யூட்டர் அது இதுங்கறாங்க. யாருக்கும் ஒன்னும் தெரிய மாட்டேங்குது.’‘ஓஹோ’‘நீங்க லோன் அப்ளை பண்ணியிருக்கீங்களா?’‘இல்லை’‘இல்ல, அக்ரி லோன் விஷயமா கும்பகோணம் ப்ராஞ்ச்சுக்கு போறீங்களோ-ன்னு நெனைச்சேன்’வேட்டி கட்டிகிட்டு போயிருந்ததால மாடு வாங்க லோன் போட்ருக்கேன்-ன்னு நெனைச்சுட்டாரு போல.‘நீங்க வேலை பாக்கறீங்களா?’‘ஆமாம்’‘எங்க சார், என்ன வேலை?’‘சென்னைல, ஒரு கம்பெனில’ கம்ப்யூட்டர் வேலை-ன்னு சொல்லிக்கலை. என்னையும் ஒன்னும் தெரியாதவங்க லிஸ்ட்ல சேர்த்துடுவாரோ-ன்னு ஒரு பயம்.‘மாசம் ஒரு பத்து கிடைக்குமா?’எவ்ளோ சம்பளம்-ன்னு கேட்கறதுக்கு இப்டி ஒரு வழி.‘பிடித்தம்லாம் போக ஒரு ஏழு கிட்ட வரும்’. இந்தக் கேள்விக்கு மட்டும் நான் உண்மையை சொல்றது இல்லை-ன்னு மகாத்மா மேல சத்தியம் செஞ்சிருக்கேன்.‘ஏழு வாங்கற ஏழை’-ன்னு சொன்னதும், நம்மளவிட கம்மிதான்-ன்னு ஒரு சந்தோஷம் அவருக்கு. தவிர என்கிட்ட இருந்து ‘ஒன்னும்’ வராது-ன்னும் முடிவுக்கு வந்துட்டார் போல.‘ஏழை வெச்சுகிட்டு செரமம்தான் இல்ல? உங்க வொய்ஃப் வேலை பாக்கறாங்களா?’உனக்கெல்லாம் எவன் பொண்ண குடுத்தான்-ங்கற மாதிரி ஒரு நக்கல் கேள்வி.வண்டியை நிறுத்தினேன்.‘கொஞ்சம் இருங்க பக்கத்து பார்மஸில போயி ஒரு மாத்திரை வாங்கிட்டு வந்துடறேன்’-ன்னு சொல்லிட்டு போயி ஒரு ஹால்ஸ் வாங்கி சப்பிக்கிட்டே வந்தேன்.‘பேங்க் எங்கே இருக்கு?’‘அடுத்த தெருவுலதான்’அப்பாடா-ன்னு இருந்துச்சு.
இன்னொருநாள், சென்னைல ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைல தம்பியோட பைக்க எடுத்துகிட்டு எதோ ஒரு வேலையா கோயம்பேடு வரைக்கும் போனேன். ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்த நேரம். நான் தினமும் பைக் ஓட்றதில்லைங்கறதுனால ஹெல்மெட் போடலை(இப்போ ஹெல்மெட் பழக்கம் வந்துடுச்சு). ஒரு ஷார்ட்ஸ், டீ ஷர்ட், பழைய செருப்பு, நெத்தில கொஞ்சம் விபூதி பூசிகிட்டு கிளம்பிட்டேன். ஞாயிற்றுக்கிழமை காலை-ங்கறதுனால அவ்ளவா ட்ராஃபிக் இல்லை. முதல் பெரிய சிக்னல்ல மாட்டினேன்.‘ஓரங்கட்டு, ஓரங்கட்டு.. ஹெல்மெட் எங்க?’ ஒரு போலீஸ் அமுக்கினார்.‘இல்லை சார், அவசரமா வந்ததுல மறந்துட்டேன் சார்’‘முன்னூறு ரூபாய் அபராதம் கட்டு’‘அவ்ளோ பணம் இல்லைசார்’‘அந்த ஜீப்ல சார் இருக்காரு அவரைப்போயி பாரு’-ன்னு காட்டிட்டு திரும்பவும் தூண்டில போட்டாரு.நான் பைக்க ஓரமா நிறுத்திட்டு ஜீப் கிட்ட போனேன். ஜீப்ல பின்பக்கம் ஒரு போலீஸ் உக்காந்திருந்தாரு. கைல பில் புக்கை வெச்சுகிட்டு, மளிகைக்கடை செட்டியாரை கொஞ்சம் ஞாபகப்படுத்தினாரு.‘என்னப்பா, ஹெல்மெட் போடாம ஏன் வண்டி ஓட்ற?’‘காலம் காலமா எல்லோரும் அப்டிதான ஓட்றாங்க’-ன்னு சொல்ல தோணிச்சு.‘இல்லை சார் அவசரமா கெளம்பினேன். அதான் சார் மறந்துட்டேன். ஹெல்மெட் வீட்ல இருக்கு சார்’‘லைசன்ஸ்ஸ எடு, வண்டி நம்பர் என்ன?’வண்டி நம்பரைப் பார்க்க திரும்பினேன்.‘என்ன வண்டி நம்பர்கூட ஞாபகம் இல்லையா? தொலைஞ்சு போனா எப்டி கம்ப்ளைண்ட் பண்ணுவ?’‘இல்லை சார், இது ப்ரதர் வண்டி, அதுனாலதான்.’‘ப்ரதர் வண்டியா? நீ எங்க வேலை பாக்கற?’‘HCL-ல சார்’‘நீ வண்டி வாங்கலியா?’கார்தான் வெச்சிருக்கேன் சார்-ன்னு நான் ஏன் சொல்லப்போறேன்.‘இல்லை சார்’ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டேன்.‘ஏன்? எவ்ளோ சம்பளம் வாங்கற நீ?’‘எழாயிரம் சார்’ நான்தான் மகாத்மா மேல சத்தியம் பண்ணியிருக்கேனே.‘ஏழாயிரமா? என்னப்பா, என் கூட வேலை பாக்கறவரோட பொண்ணு TCS-ல வேலை பாக்கறா. பதினஞ்சாயிரம் வாங்கறாலாம்?’‘இல்லை சார், நான் இப்போதான் சேர்ந்திருக்கேன்.’‘சாஃப்ட்வேர் கம்பெனிலல்லாம் சேரும்போதே பத்தாயிரத்துக்கு மேல தர்றாங்களாமேப்பா’‘ஆமா சார், நான் ஹார்ட்வேர்ல இருந்தேன். இப்போதான் சாஃப்ட்வேர்க்கு மாறியிருக்கேன். அதுனாலதான் சம்பளம் கம்மி. அடுத்த வருஷம் இன்க்ரிமெண்ட் கெடைக்கும் சார்’ முகத்தில் பாவ ரசத்தை இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொண்டேன்.‘நல்லா வேலைபார்த்தா, அமேரிக்கா, ஜப்பான்லாம் போலாங்கறாங்க!!’‘ஆமா சார், நல்ல எக்ஸ்பீரியண்ஸ் கெடைச்சா போலாம் சார். அதுனாலதான் சார் சாஃப்ட்வேர்க்கு மாறினேன்.’‘இங்லீஷெல்லாம் நல்லா பேசணுமாமே?’உன்னைப்பாத்தா தமிழே சரியாப் பேச மாட்ட போலருக்கே-ன்னு ஒரு பாவப் பார்வை பார்த்தாரு. என் முகத்துல இருந்த பாவ ரசம் வேலை செய்யுது.‘ஆமா சார், அதுவும் கத்துகிட்டு இருக்கேன் சார்’.‘சரி சரி ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் கட்டு, இனிமே ஹெல்மெட் போடாம வராத’.கட்டிட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
அமெரிக்கால இருந்து இந்தியா வரணும்-ன்னு நெனைக்கற என்னோட நண்பர்களுக்கெல்லாம் நான் ஒரு உரைகல் மாதிரி.‘நம்ம எக்ஸ்பீரியன்ஸ்ஸுக்கெல்லாம் எவ்ளோ மச்சி சம்பளம் தருவாங்க?’ முதல் அட்டெம்ட்.‘அதெல்லாம் நீ நெகோஷியேட் பண்றதுலதான் இருக்கு மச்சி’‘பத்து வருஷம் டாட் நெட் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களுக்கு என்ன போஸ்ட் கிடைக்கும் மச்சி?’‘சீனியர் அனாலிஸ்ட், மேனேஜர், சீனியர் மேனேஜர் எது வேணும்னாலும் கெடைக்கும் மச்சி. நீ பேசறதுலதான் இருக்கு.’‘மேனேஜர்-க்கெல்லாம் எவ்ளோ சம்பளம் கெடைக்கும்?’ அடுத்த அட்டெம்ட்.‘அதுவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி மச்சி’‘ஒரு ரேஞ்சாவது சொல்லு மச்சி’‘ஒரு பத்துல இருந்து இருபது வரைக்கும்-ன்னு வெச்சுக்கோயேன்’‘நீ எவ்ளோ மச்சி வாங்கற’ கடைசி அட்டெம்ட்.என் சத்தியத்துக்கு பங்கம் வராம, பத்து, பண்ணெண்டு, பதினைஞ்சு, பதினெட்டு, இருவது இப்டி எதாவது ஒரு நம்பர் சொல்லிடுவேன்.
இன்னும் பலபேர் இதே கேள்விய இன்னும் பலவிதமா கேட்ருக்காங்க. அப்பாகூட வேலை பார்த்த அங்கிள், பக்கத்து வீட்டு மாமி, டீக்கடை மொதலாளி, இன்ஸூரண்ஸ் ஏஜண்ட், க்ரெடிட் கார்ட் சேல்ஸ் வுமன், இன்னும் நெறைய பேர்.‘என்ன வாங்கற தம்பீ?’, ‘ஒரு இருபது கெடைக்குமா?’, ‘கம்பெனில என்ன கொடுப்பாங்க?’, ‘சம்பளம் எவ்ளோ சார்?’-ன்னு விதவிதமான கேள்விகள். ஒவ்வொருத்தர்கிட்டையும் ஒவ்வொரு பதில் சொல்லியிருக்கேன். அவங்க யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியம். அப்டியே பேசிகிட்டாலும், அவங்கவுங்க சம்பளங்களைப் பத்தி பேசிப்பாங்களேத் தவிர என்னோட சம்பளத்தைப் பத்தி பேசமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கை.
ஒன்லீ ஒன் பர்ஸன், ஒரே ஒருத்தர்கிட்ட மட்டும்தான் என்னோட உண்மையான சம்பளத்தை சொல்லுவேன். அது வேற யாரும் இல்லை. நீங்கதான். என் உண்மையான சம்பளம் என்ன-ன்னு உங்ககிட்ட மட்டும்தான் சொல்லலாம்னு இருக்கேன். சொல்லட்டா?

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல…

ஆரோக்கியமான வாழ்வு கடினமானதா ? எளிதானதா ? கேள்விகள் காலம் காலமாய் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.

1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.
நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

2. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.
தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

3. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.
செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.
ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

4. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.5. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.6. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

7. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

8. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

9. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.

10. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.
இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

நன்றி கவிதை சோலை இணையத்தளம் !

Thursday 22 May 2008

7 Powerful Questions That Spark Fresh Ideas

1. What’s broken here?
2. What’s missing in my life?
3. What value can I bring here?
4. What can I learn here?
5. What would enough be?
6. How can it be simplified?
7. How can this be remarkable?



What's broken here?
Throughout our day to day we're bound to run into a product, service, or idea that is clearly broken in some way. We can use our mind to conceive a way of sprinkling some fairy dust here and making it better than the original inventor had intended it to be.It's a matter of taking an existing idea, putting your special kung-fu chop on it, and transforming it into a sticky, scalable, and useful innovation.

What's missing in my life?
Is there a big void in your life that one new idea, gadget, gizmo, or service could fill and make life a bit easier for you? If there is, then chances are that others, million of others, have this void (whether they know it or not) and are just waiting to discover and fill it.Be the one to use your life as the perfect example of what needs fixin'. Create the perfect idea to suit you, figure out if it will suit others, and go from there.

What value can I bring here?
Some things don't need changing when looked at by the naked eye. You can however take the back door approach to innovation. Instead of saying what's wrong, or what's missing, just ask how you could contribute to what is.By using this trojan horse of an entry into the world of ideas you may find a solution that's so poppin' fresh it's better than that small invention originally named arpanet.

What can I learn here?
Many of us go through life like drones, following a series of habits that lead us like a carrot leading a mule. Even if these habits are awesome, it's still important to become conscious of the surroundings and appreciate the current moment in which we're living.As we plop out of our dreary daydream of a life and get hit smack in the face with reality, we may realize that there is a lesson to learn. This lesson might get you thinking. Before you know it, you've invented trees and moved into a rain forest or a myriad of other fascinating ideas.

What would enough be?
The pyramids were not built by throwing down one square boulder and calling it a day. For the Egyptians enough meant having a majestic structure that ended in a point high in the sky. Are the ideas that we entertain small, safe, and comfortable?The general rule is that if your idea seems like it's going to be a piece of cake to get underway it's probably a bit too small for the type of person that you are. Thinking in terms of huge, and in terms of, this will take a lot of work but through determination, perseverance, and deliberate action it can be accomplished will open up the flood gates of ideas.

How can it be simplified?
Ever hear the expression that more is less and less is more? Put on your Buddhist monk hat and consider that what the world has is too much of something. Smaller, more mobile, more durable, less parts, easier, lighter, or any other word that has to do with simplicity.Think about how much easier your life would be if it were simplified. You would have more time to do the things you really love, just as long as you could figure out what that means to you.

How can this be remarkable?
Not everything that we encounter in life will be missing, broken, or contain an onslaught of extra pieces that need removing in order to discover the shiny simple possibility that lives deep inside. Some things suffer from being dull-normal and need someone to ask the right question to turn the service, product, or idea into something more.Perhaps what's really needed is something that is so damn cool you'll never have to spend a penny on advertising because every single person that hears about it is going to tell everyone they know. Perhaps this is the best question to ask ourselves when living into brilliant ideas.

பேச்சிலர் மட்டன் குழம்பு

சனிக்கிழமை சாயந்திரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருச்சேன். வழக்கம் போல இண்டர்நெட்டை கொஞ்சம் மேய்ந்து விட்டு டிவியை ஆன் பண்ணி கொஞ்சம் நேரம் பார்த்தேன். ஏதாவது சமையல் செய்யலாம் அப்படின்னு தோணிச்சு. சனிக்கிழமை நைட் தான் நான் பெரும்பாலும் சமையல் செய்வேன். சமையல் செஞ்சிட வேண்டியது தான்னு முடிவு செய்து ஆரம்பிச்சேன். மட்டன் குழம்பு செஞ்சிடலாம்னு முடிவு செய்தேன். இண்டர்நெட்டுல சமையல் குறிப்பு எல்லாம் பார்த்து சமையல் செய்றது நம்ம மாதிரி பேச்சுலர்களுக்கு சரி வராது. அவங்க குறிப்பு சொல்ற பொருளை எல்லாம் நம்மால தேட முடியாது.
அதனால பேச்சிலர்களுக்கான சிம்பிளான சமையல் குறிப்பு
முதல்ல இரண்டு நாளைக்கு முன்னால ப்ரிட்ஜூல வாங்கி வைச்சிருக்கிற மட்டனை எடுத்து சுடுதண்ணியில கொஞ்ச நேரம் போடணும். கெட்டியா இருந்த மட்டன் லேசா ஆனவுடன் சின்னதா வெட்டனும். அதை நல்லா சுடுதண்ணியில கழுவி கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு எல்லாம் போட்டு கொஞ்ச நேரம் ப்ரிட்ஜூல ஊறல் போடணும்.
அப்புறம் வெங்காயம், தக்காளி இரண்டையும் கட் பண்ணி வைக்கணும். கொஞ்சம் வெங்காயம், இஞ்சி-பூண்டு மிக்ஸ், தேங்காய் எல்லாத்தையும் மிக்சியில அரைத்து தனியா வைக்கணும். Frozen தேங்காய் தான் நான் பெரும்பாலும் பயன்படுத்தறது வழக்கம். கொஞ்சம் சோம்பேறித்தனமா இருந்தா மிக்சியில அரைக்க மாட்டேன். நேரா பாத்திரத்துல போட்டுவேன்.
அப்புறம் ஒரு பாத்திரத்துல எண்ணெய் போட்டு, கடுகு-உளுத்தம்பருப்பு இரண்டையும் போட்டு கடுகு வெடிச்சதும் வெங்காயத்தை போடணும். நல்லா வதக்கியதும் அப்புறம் தக்காளியை போடணும். தக்காளியும் நல்லா வதங்கியதும் கொஞ்சம் உப்பு, சக்தி மட்டன் மசாலா இரண்டையும் போட்டு நல்லா வதக்கணும். அப்புறம் இந்த வெங்காயம்-தேங்காய்-இஞ்சி-பூண்டு மசியலை எடுத்து பாத்திரத்துல கொட்டணும். கூடவே ப்ரிட்ஜூல ஊறல் போட்ட மட்டனையும் போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து உப்பு, காரம் பதம் எல்லாம் பார்க்கணும். உப்பு, காரம் குறைவா இருந்தா கொஞ்சம் உப்பு, காரம் போட்டு கொதிக்க வைக்கணும். அதிகமா இருந்தா ? நல்ல கேள்வி தான். நான் எப்பவுமே ஆரம்பத்துல குறைவா போடறது தான் வழக்கம். குறைவா போட்டு கடைசியா சரி பண்ணிக்கலாம். அதிக உப்பு இருந்தா கொஞ்சம் தயிர் சேர்த்துக்கலாம்.
எல்லாம் நல்லா இருந்துச்சின்னா இறக்கி வைச்சு ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான்.
இந்தியன் ரெஸ்டரண்ட்ல சாப்பிடறை விட இது ரொம்ப நல்லாவே இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு.

அமெரிக்க சாப்ட்வேர் வாழ்க்கையில் ஒரு நாள்

இன்னைக்கு காலையில் எழுந்தப்பவே மணி எட்டு. 8:30மணிக்கு ஆபிசுல ஒரு மீட்டிங். எவன் தான் இப்படி 8:30மணிக்கு மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை. எனக்கு ஒரு மேனேஜர் இருக்கார். அவர் ஒரு சேவல் மாதிரி. 5 மணிக்கு மனுஷன் எழுந்திடுவாரு. ஒரே மெயிலா அடிச்சி தள்ளுவாரு. 7:30மணிக்கு ஆபிசுக்கு வந்திடுவாரு. அதனால் அவர் எப்பவுமே மீட்டிங் செட் பண்ற நேரம் காலை ஒன்பது மணி, 8:30 மணி இப்படி தான் இருக்கும். மேனேஜர்னா என்னா கொம்பா அப்படின்னு எனக்கு தோணும். இருந்தாலும் என்ன பண்றது குப்பை கொட்டியாகனுமேன்னு மல்லு கட்ட வேண்டி இருக்கு. இன்னைக்கு 8:30மணி மீட்டிங் மட்டம் தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு காக்கா குளியல் போட்டு 8:30 பஸ் புடிச்சு, அப்புறம் ஒரு டிரெயின் புடிச்சி ஆபிஸ் நுழையறப்ப மணி 9:30, மீட்டிங் அவ்வளவு தான்னு நமக்கு தெரியும். மேனேஜருக்கு முகத்தை காட்டமா அப்படியே நழுவி சீட்டுக்கு வந்துட்டேன்.
சீட்டுக்கு வந்ததும் முதல் வேலை இ-மெயில் செக் பண்றது. காலையில இது ஒரு இம்சை. ஒரு 100 மெயில் இருக்கும். அதுல எனக்கு தேவையான மெயில் ஒரு 5 மெயில் தான் இருக்கும். அந்த 5 மெயிலை கண்டுபிடிக்க 100 மெயிலையும் மேய்ந்து ஆகணும். வேகமா ஒவ்வொரு மெயிலா பார்த்து முடிச்சப்ப மணி 10:30 ஆயிடுச்சி. ரொம்ப களைப்பா இருந்துச்சா ஒரு காபி குடிக்கலாம்னு ஆபிஸ் cafeteria வந்தேன். இந்த காபி ஒரு இம்சை. சென்னையில நாயர் கடை காபி, டீ சாப்பிட்டு பழக்கப்பட்டு போன நமக்கு இது ஒரு கசாயம் மாதிரி. ஒரு 6 பாக்கெட் சக்கரை எடுத்தேன். 6 பாக்கெட் சக்கரை கொட்டினா, அது ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு வரும். அதை போட்டு கப் நிறைய காபி ஊத்தி, சும்மா கொஞ்சம் பால் ஊத்தினா கசாயம் தயார் ஆயிடும். அதுக்கு விலை 1.25டாலர். 50 ரூபாய் அப்படின்னு ஆரம்ப காலத்துல மனசு கணக்கு போடும். இப்பவல்லாம் அப்படி இல்லை. நம்ம ஊரு விலை நிலவரம் இப்ப மோசமாமே…
காபி குடிச்சு முடிக்கறப்ப மணி 11மணி ஆயிடுச்சி. மேனேஜர் எங்க நம்பள தேடுவாரோ அப்படின்னு பயம் எல்லாம் இல்ல. அதான் “I am looking into this” அப்படின்னு ஒரு நாலு இ-மெயில மேனேஜருக்கு “CC” போட்டு தட்டிட்டு வந்திருக்கோம்ல. பையன் ஆபிசுல தான் இருக்கான் அப்படின்னு மேனேஜருக்கு தெரியும். வேலை களைப்புல தம் போட போயிருப்பான் அப்படின்னு நினைச்சுருப்பாரு. 11மணிக்கு சீட்டுக்கு வந்து “Looking into this” அப்படின்னு அரை மணி நேரத்துக்கு முன்னாடி சொன்ன பிரச்சனையை பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ளாற ஒரு இம்சை “Any update on this” அப்படின்னு கேட்டு தொலைச்சிருக்கான். அவன் பெயரைப் பார்த்தேன். நம்மவூர் ஆளு தான். நம்மள மாதிரியே இப்படி மெயில் அடிச்சிட்டு “தம்” போட போயிருப்பான் அப்படின்னு நினைக்கிறேன். பார்த்து தொலைக்கிறேண்டா அப்படின்னு திட்டிக்கிட்டே அந்த மெயிலை முதல்ல கவனிச்சு அவனுக்கு ஒரு பதில் போட்டேன். அது போல அந்த நாலு மெயிலையும் கவனிச்சு முடிச்சா மணி 12:30 ஆயிடுச்சி. சாப்பாடு நேரம் வந்திடுச்சிடோய் அப்படின்னு நம்ம நட்பு ஒருத்தன் வந்து தோலைத் தட்டினான். சரிடா அப்படின்னு கம்யூட்டரை லாக் பண்ணிட்டு கிளம்பினோம்.
எங்க சாப்பிடறதுன்னு முடிவு பண்றது அடுத்த பிரச்சனை. சரி, நேரா subway போலாம்டா அப்படின்னு முடிவு பண்ணி subway போனோம். இது ஒரு கொடுமையான விஷயம். ஆனாலும் cheap and best. ஒரு பிரட்டை வைச்சி நாளு இலை, தழைகளை வச்சி கொடுப்பானுங்க. அதுக்கு 4 டாலர். இங்கயாவது பரவாயில்லை. இதையே நம்ம சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவுல வச்சி அதுக்கு 200ரூபான்னு சொல்றானுங்க. அங்கன நம்ம அமுல் பேபி பசங்க, பொண்ணுங்க வாங்கற கொடுமைக்கு பெயர் - அமெரிக்க கலாச்சாரமாம்.
லஞ்ச் சாப்பிட்டு முடிக்கறப்ப மணி 1:30. நேரா சீட்டுக்கு வந்தா, 2மணிக்கு ஒரு மீட்டிங்காம். எப்படி இன்னும் சிறந்ததா மென்பொருள் தயாரிக்கலாம் அப்படின்னு அனலிசிஸ் பண்ண போறாங்களாம். அதுக்கு பேர் - Brain Storming. இப்படி பேசி பேசியே மண்டையில முடி இல்லாமா போச்சிடுடா அப்படின்னு நொந்து நூடுல்சானேன். ஏற்கனவே அனுப்பின மெயிலுக்கு விளக்கம் கேட்டு சில மெயில்கள். அதுக்கு விளக்கம் சொல்லி முடிச்சி, நேற்று பாதியில விட்டுட்டு போன coding ஆரம்பிக்க போனா, மனசுல நம்மவூர் ஞாபகம் வந்திடுச்சி. நம்ம Rediff, தினமலர் எல்லாம் ஒரு பார்வை போட்டுட்டு பார்த்தா மணி 2 ஆயிடுச்சி.
“Coming..” அப்படின்னு மேனேஜர் கேட்க, வர்றேண்டா அப்படின்னு கிளம்பினேன். நடந்து போனா நம்ம பக்கத்து ப்ராஜக்ட் பொண்ணு க்ராஸ் ஆச்சு. ஒரு ஸ்மைல் போட்டு “ஹாய்” சொல்லிட்டு “கொஞ்சம் குண்டா ஆயிட்டா” அப்படின்னு நினைச்சுக்கிட்டே கான்பிரன்ஸ் ரூம் போனேன். கொஞ்ச நேரம் சொந்த கதை சோக கதை எல்லாம் பேசிட்டு நல்லா Brain Storming பண்ணா, தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. கெட்டியா முழிச்சிக்கிட்டு ஐடியாவா போட்டு தள்ளினோம். இப்ப ஓடற இந்த Process, முப்பது நிமிடம் ஆகுது. 5-10 நிமிடத்துல இது ஓடியாகனும் அப்படின்னு நம்ம மேனேஜர் சொன்னாரு. 1மணி நேரம் ஓடிக்கிட்டு இருந்ததை 30நிமிடம் ஆக்கனும்னு சொன்னே. இப்ப 30நிமிடம் ஓடறது 5-10 நிமிடமாம். இப்படியே வேலையை கொடுத்துக்கிட்டே இருங்க, அப்ப தான் எல்லோருக்கும், எல்லா காலத்திலேயும் வேலை இருக்கும் அப்படின்னு நினைச்சுக்க்கிட்டேன். அடுத்த ப்ராஜக்ட்டா இப்ப இருக்கிற Database மாற்றி வேற Database போகலாம்னு சொன்னாரு. போன வருஷம் தான் வேற ஒண்ணுல இருந்து மாறினோம். இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க. இங்கேயே நான் ரிடயர் ஆயிடறேன் அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.
மீட்டிங் முடிஞ்சப்ப மணி 3 ஆயிடுச்சி. “let’s go for coffee” அப்படின்னு மேனேஜர் சொன்னாரா, அப்படியே cafeteria வந்தோம். காபி வாங்கி ஒரு தம் போட்டு முடிக்கறப்ப மணி 3:30 ஆயிடுச்சி. நேரா சீட்டுக்கு வந்து பாதியில இருந்த Codingஐ ஆரம்பிச்சேன். அத்த முடிச்சு, டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சா மணி 4:30 ஆயிடுச்சி. மறுபடியும் ஹிந்து, எக்னாமிஸ் டைம்ஸ், blooomberg, சி.என்.என் அப்படின்னு மேய்ந்து விட்டு மணி பார்த்தா 5:30ஆயிடுச்சி. மேனேஜர் வீட்டுக்கு போயிட்டாரா அப்படின்னு நைசா எட்டி பார்த்தேன். மனுஷன் அசையற மாதிரி தெரியலை. அவருக்கு தெரியும். அவரு அங்க இருந்து கிளம்பினா அடுத்த நொடி எல்லா பசங்களும் எஸ்கேப் ஆயிடுவானுங்க அப்படின்னு. அதான் மனுஷன் 7:30 மணியில இருந்து அசையாம சீட்டுல உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. சரி என்ன பண்ணலாம் அப்படின்னு தோன்றப்ப, லைட்டா வாக்கிங் போகலாம்னு நேரா தண்ணி குடிக்க வந்தேன். பச்சை தண்ணி தான் - மினரல் வாட்டர். குடிச்சிட்டு பக்கத்து ப்ராஜக்ட் பக்கமா அப்படியே போனேன். ஒரு கூட்டம் தெரிஞ்சுது. கொஞ்சம் நேரம் அரட்டை போட்டு விட்டு வந்தா மேனேஜர் வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்காரு. இதை தானே எதிர்பார்த்தோம் அப்படின்னு ஒரு ஸ்மெல் போட்டோம்.
“Not leaving” அப்படின்னு கேட்டாரு. “Some work to complete” அப்படின்னு சொன்னேன். “Don’t work hard” அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. சொல்லுவடா சொல்லுவ, வேலையை வரிசையா குடு அப்புறம் Don’t work hard அப்படின்னு சொல்லு அப்படின்னு நினைச்சுக்கிட்டே சீட்டுக்கு வந்து பையை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிய பொழுது மணி 6

CAREER CLINIC: From ugly duckling to beautiful swan

Dear Khun Munthana, I'm wondering where you stand on the "beautiful is important than smart" issue? To give you my background, I graduated with a bachelor's degree from a reputable government university in Thailand and went on to earn a second degree from a university in the US, graduating with a high GPA.

I have eight years work experience with two international companies. I'm employed as a deputy manager at my current company, a firm I have been with for six years.
Another young lady joined the company on the same day as me and she is also a deputy manager. She is pretty, sweet, far more glamourous compared to me and has always attracted attention, especially from members of the opposite sex.

That is not what irks me, though. I am good at my job and have been promoted twice while with my current employer. However, I was stunned last week when my boss informed me in private that he planned to promote my pretty colleague to full manager status ahead of me.
I am not jealous of her beauty but I can't help feeling that this promotion is unfair on me given that I'm better at the job than she is (I've even had to help her complete her work on occasion). I don't want to believe that I am being passed over based on looks but what other reason could that be? What can I do in this situation?

Ugly Duckling


Dear Ugly Duckling
Intelligence is a long-term quality! If you'll forgive the pun, the beauty of being smart is that your intelligence strengthens and sharpens as time goes by. Conversely, being pretty tends to be relatively short-term and good looks fade over time (unless you're a fan of regular Botox injections).

I do not have details of your performance or that of your colleague and thus, I can't comment on which of you might be more deserving of promotion. However, I can say that from a psychological point of view people who project a positive outlook are more likely to be perceived in a positive way, irrespective of their looks.

In my book you already have every reason to be positive because being born smart is similar to winning the 1st prize in a lottery.

You know you have the intelligence and, as in the children's story, there is no reason why an ugly duckling can't grow into a beautiful swan. So, be mindful of how your personality effects the way people perceive you and work on being as professional in your presentation as possible.
Heading towards that goal?Consider the following:

- Exercise hard at least three times a week for 30 minutes or until you "feel the burn". Feeling fit and healthy boosts performance and confidence and others will notice.

- Inner beauty is always more important than physical attractiveness. So try to maintain a good nature at all times (I find meditation helps decrease the kind of stress and anger that makes me crabby).

- Learn to speak in a moderate tone but remember a monotone is a no-no tone.

- Be polite and offer to help others when opportunities arise.

- Laugh at least five times a day. If you can't laugh in the office then give yourself something to smile about at home.

- Think positively and treat every unexpected issue as a challenge.

- Select your attire appropriately - comply with your company's dress code and make sure you appearance is professional (tip: Avoid wearing strong perfume).

Once you are happy in mind and body I'm sure you will become the fast-rising swan you want to be.

Communication is key

'And, they lived happily ever after."


This familiar phrase is where most fairy tales end. The adventurous journey of a prince and a princess comes to an end and they begin a new life together as husband and wife, a life of promise, romance and above all, love.

But in real life, getting married is when your journey begins and not all relationships end happy. The divorce rate has increased during the past decade: Twenty to 30 per cent among Thais and is as high as 40 to 50 per cent in a few Western countries. This reflects that maintaining a long-term relationship is not as easy as one may think.

Conflict is a natural part of every relationship. Arguments can occur at any time, on any issue, in any situation and without warning. Therefore, long-term relationships require intensive maintenance in a regular fashion.

One of the most important components required for maintaining every relationship shape is effective "communication".

Good communication is a vital component of any healthy relationship. However, to communicate effectively isn't always easy. Every couple needs to know the right way to communicate; talk, behave and listen to keep their relationship healthy.

When conflict arises in your married life, the following tips can be helpful to facilitate effective communication:

- Avoid blame and judgement: Do not assign any responsibility to the other person. Try not to judge your partner's thoughts or behaviour as "wrong". Disagreement with another person's idea does not make you "right".
Instead, share emotions and concerns open-mindedly without blaming anyone. Explain what you think and how you feel regarding the problems or situations.

- Do not make assumptions: Problems usually occur when we make assumptions about what, how or why something went wrong. The conclusions we make are generally based on past experiences and beliefs, which may be incorrect. Therefore, before making any conclusion, ask questions and allow the other person to answer them and then try and understand your partner's point of view.

- Keep your emotions and reactions in control: Don't let your emotions dictate your behaviour. Take control of yourself and try not to react to any situation excessively or aggressively.
Make a purposeful decision about how to respond. Everyone's feelings count, not yours alone. It is important and should be acknowledged.

- Listen! Believe it or not, listening is the most important component in the effective communication process, not talking. Use more of your ears than your mouth. Pay attention to what others say or explain instead of planning your defence strategy while the other person is talking.

These tactics are useful tools every couple can adopt to avoid conflicts and are especially important during arguments.

Successful relationships depend on good and effective communication to keep them strong. Keep your relationship healthy at all times and live happily ever after.

அரசாங்கம் - திரை விமர்சனம்

Starring: Vijaykanth, Navneet Kaur, Seril Brindo, Rahul Dev, Biju MenonDirection: R.Madhesh
Music: Srikanth Deva
Production: L.K. Sudheesh

Captain is back - saving India and its citizens from the vicious terrorists. Arasangam, however, tries to portray this nothing-so-new story by downplaying the usual supplements of a Vijayakanth movie, thereby proving to be watchable. Besides, it employs stylish camera angles and breathtaking sets and locations, setting itself a world apart from the other Vijayakanth movies.
The story, however, falls into the standard ‘Captain rescues India from the terrorist masterminds and master plans’ genre. Vijayakanth is an IPS officer with a specialization in criminology. When India’s top brains are serial-killed and officer Biju Menon, brought in to investigate the matter, is also found dead during his flight, Vijayakanth becomes the unanimous choice to nail the terrorists and foil their future plans.He discovers about Operation Blue Thunder, formulated by terrorists from developed countries to cripple India’s growth. The operation aims at executing the nerve system of India – scientists, directors of top research institutions, economists, and politicians. Now it is left to the Captain to nab the baddies and save the country.With a script that provides enough fodder for a typical Vijayakanth movie, Director Madesh has done his best to present

it with credibility. His attempts succeed in the first half and lose steam in the latter. After all, exotic locations and hi-fi visual fundas are not sufficient to sustain interest when the script has nothing new to offer. Nevertheless, Madesh’s source of inspiration (Silence of Lambs, to be precise) is evident in more than a few scenes.
Captain ought to shed a little more flab (a lot actually), it prevents him from performing his famous fast-as-a-supersonic stunt sequences. Rakhi Rajesh’s stunt proclaims his wild imagination and sadly defies all the published laws of gravity. The stunts also remain another source of inspiration for people to lose interest. Biju Menon, in his double role, excels with his subtle performance.Srikanth Deva’s ‘Cindrella’ and ‘Koo Kuruvi’ numbers are catchy but the background score is simply eardrum cracking. Tarun Kumar and Dinesh’s dance movements are also worth noticing. Venkatesh’s camera endows the movie with a stylish look, especially in the scenes when the movie travels to Canada.

ஒரு தடவை பாக்கலாம் . மற்ற விஜயகாந்த் படங்கள்ல இருந்து இந்த படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது !!!

Wednesday 21 May 2008

Getting on with life - கேள்வி பதில்

My life is in a slump! I recently lost my job when my employer relocated to Vietnam and my relationship with my boyfriend of seven years ended not long ago. I feel listless but I know that getting back to work would be a positive step in the right direction. Could you find a new job for me or give me some guidelines I could use to move forward?
Much appreciated,
Bait

Dear Bait
I am more than happy to share with you some guidelines for job search techniques.
To start with you need to manage your emotions. Try not to become despondent and remember that there are always jobs out there. Be positive about your possibilities and know that new opportunities are just around the corner. There are a number of instances where people who were out-off-work used their 'down-time' to reflect on and re-plan their careers, and then went on to become millionaires - Saichon of Banrai Coffee House is a good example. With patience, preparation and a bit of courage you too can succeed. Begin by:

1. Understand the symptoms of stress
Emotional responses come from feelings of being trapped , denial, anger and depression, all of which cause stress. To move on, you need to feel acceptance. Accept the situation you're in and plan to deal with it. With a course of action in place you will have greater direction and feel less stress.

2. Set Goals
You have time to sit down and set your personal goals. Make out lists of your short, medium and long term goals. If you don't know where you are going you will probably end up somewhere you don't want to be!! The tip here is to be realistic and set goals that are challenging but achievable.

3. Personal Assessment
Analyse your experience, skills, knowledge, interests, and values. Once you understand your true worth you will be able to target jobs and potential employers more accurately. People who are good at what they do tend to enjoy their work more. So, what role would fulfill you professionally and best utilise your skills set?

4. Prepare you resume
The purpose of a resume is to introduce you to a potential employer. Your resume should present your background, highlight major accomplishments/achievements and emphasize your professional strengths. You can search for a popular resume formats on the Internet.

5. Understand the job market
You need to remember that you are in charge of your job search. You must take full responsibility for it and you must make a personal commitment to the task at hand for it to succeed. Please note that this is a full time activity and is probably the hardest task you will face. Keep up to date with the activities and employment scene in the industries that interest you. Read a newspaper every day and keep up with business news and current affairs. Maintain old work contacts - word of mouth is a powerful tool for a job seeker.

6. Make a start!
Here is something you could do today update your resume and email it to reputable recruitment firms that specialise in placing candidates in those industries that interest you. Use the Internet to search for the recruitment firms and then visit their websites for job and contact information.
Finally, try to be positive about your job search, and try to enjoy the challenge of finding a new and better job. Remember the words of Albert Einstein: "A person starts to live when he can live outside himself."
Good luck!