Thursday 18 June 2009

எக்மோர் டு தாம்பரம்! (ஒரு பக்க கதை) நன்றி: விகடன்

சட்டை, பேன்ட், பர்ஸ், ஷோல்டர் பேக் எல்லா வற்றிலும் தேடிப் பார்த்த நரேனுக்கு பகீர் என்றது. செல்-போனை ஒற்றி, "மச்சான், டிக்கெட்டை ரூம்லயே வெச்சுட்டு டிரெய்ன் ஏறிட்டேன்டா! டிக்கெட் மேஜை-ல இருக்கான்னு பாரேன்!"

22 தந்திக் கம்பங்கள் கடந்த பிறகு, "உன் டிராயர்ல இருக்குடா..!" என்றது எதிர்முனை.

"என்னடா பண்ணலாம்?"

"வண்டி கிளம்பிடுச்சா?"

"எக்மோர்ல இருந்து கிளம்பி சேத்துப்பட் நெருங் கிட்டு இருக்கு!"

"தாம்பரத்துல நிப்பான்னு நினைக்கிறேன். சரி, நீ கவலைப்படாதே! டிக்கெட்டை நான் எடுத்துட்டு வர்றேன். எப்படியாவது தாம்பரத்துல உன்கிட்ட டிக்-கெட் இருக்கும்!"

கொஞ்சம் தைரியம் வந்தது நரேனுக்கு. 'மச்சான் கிரிமினல் கில்லாடி. எப்படியாவது டிக்கெட்டைக் கொண்டு வந்துருவான்!' என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான்.கிண்டி நெருங்குகை-யில் டிக்கெட் கலெக்டர் வருவது தெரிந்தது. 'விஷயத்-தைச் சொல்லிவிடலாமா?' என்று ஒருகணம் யோசித்-தவன், 'அதுதான் தாம்பரத்தில் டிக்கெட் கைக்கு வந்து -விடுமே!' என்று அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து முழுமறைவானான். சிறிது நேரம் கழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தபோது டிக்கெட் கலெக்டர் அவன் இருப்பிடத்திலேயே நிற்பதைக்கண்டு தலையை மீண்டும் உள்ளே இழுத் துக்கொண்டான். திடீரென வண்டி நிற்பதை உணர்ந்து வெளியே வந்தவன், அருகில் இருந்த-வரிடம் "தாம்பரம் வந்துடுச்சா?" என்று கேட்டான்.

"இல்லீங்க... அதுக்கு முந்தின ஸ்டேஷன்ல நிக்குது!" என்ற பதில். மீண்டும் மறைவானான். வண்டி நீண்ட நேரமாக நிற்கவும், எரிச்சலடைந்து இருக்கையிலேயே இருந்து எதையும் சமாளிப்போம் என்று உள்ளே வந்தான். காத்திருந்த டிக்கெட் கலெக்டர் அருகில் இரண்டு போலீஸ்.

"சார், உங்க டிக்கெட்டைக் காண்பிக்கிறீங்களா?"

"ஸாரி சார்! மறந்து வீட்ல வெச்சுட்டேன். தாம் பரத்துல குடுத்துடறேன். என் ஃப்ரெண்ட் கொண்டு வந்துட்டு இருக்கான்!"

"அப்ப நீயேதான்... நட, ஸ்டேஷனுக்கு!"

"சார், ஃபைன் வேணும்னா போட்டுக்குங்க... ஸ்டே ஷன்லாம் வேண்டாம்!"

"ஸ்டேஷன்லதான் உங்க ஃப்ரெண்ட் இருக்கார். அவருக்கு நீங்க கம்பெனி கொடுக்க வேண்டாமா?" என்றார் ஒரு போலீஸ் எகத்தாளமாக.

"என்ன சார் சொல்றீங்க?"

"ஏன்டா! டிரெயினை தாம்பரத்துக்கு லேட்டா வர வைக்கணும்கிறதுக்காக 'டிரெயின்ல வெடிகுண்டு இருக்-கு'ன்னு புரளியைக் கிளப்புறவனை வேற எங்கேடா வெச்சிருப்பாங்க..! ராஸ்கல்ஸ்!" பிடரியில் விழுந்த அடியில் பொறிகலங்கிப் போனது நரேனுக்கு!

- நாகராஜகுமார்

2 comments:

Anonymous said...

thanks
nagarajakumar

Anonymous said...

நன்றி.

தங்கள் அன்புள்ள நாகராஜகுமார்.

தொடர்புக்கு : nagarajakumars@gmail.com