Friday 26 June 2009

நீதான் புலி....

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் போ‌லிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் முப்படைகளும் அக்காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு
கனடா....பிரான்ஸ்..... ஆஸ்த்ரேலியா....

இன்னும் பல நாடுகளும்
ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூடி புலி பிடிக்கும் மகாநாடு
ஒன்றும் நடத்தப்பட்டது

அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே........ ஒரு குரல்...........

பார்த்தா‌‌‌ல் இலங்கை அதிபர் .....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறோம் ஆயுதத்தோட...
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்குள் போய்...
நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக்காட்டுக்குள் சென்றன..

அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத்திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி.... .

ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந்தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்

"ஒத்துக் கொள்ளு... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?

அதற்கு பன்றி

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25
வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு....

கதையின் நீதி:
உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...! - சேகுவேரா

1 comment:

Unknown said...

very good ..... story....