Friday 24 April 2009

ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவது இல்லை?

தத்துவத்துக்குக் கடவுள் தேவை இல்லை. விஞ்ஞானம் முடியும் புள்ளி யில் தத்துவம் துவங்குகிறது. கட வுளை நம்புவது என்பது பகுத்தறிவான, 'லாஜிக்'கலான, ஆதாரம் இல் லாத (மூட)நம்பிக்கை என்பதுதத்துவ வாதிகளின் பரவலான கருத்து.

ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார். 'நான்தான் கடவுள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் அடிப்படையான வன்' என்றார். தத்துவவாதி, 'ஓ.கே. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது, அது நல்லது என்பதால் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?' என்று கேட்டார். கடவுள் 'நான்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால்தான் ஒன்று நல்லதாகிறது!' என்று பதில் சொல்ல, 'அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்து கொல்வது என்பது 'நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?' என்றார் தத்துவவாதி. கடவுளுக்குக் கோபம் வருகிறது. தத்துவவாதி தொடர்ந்து 'அது நல்லது இல்லை. ஆகவேதான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?' என்கிறார். 'நீ திருந்த மாட்டாய்!' என்று எரிச்சலோடு கடவுள் மறைந்துவிடுகிறார். (தத்துவ மேதை பிளேட்டோ சொன்ன கதை இது!)

No comments: