Friday 22 May 2009

கண்ணே மணியே !!!!

ஏதாவது ஒரு பொருளைக் கண்களைக் குவித்துப் பார்க்கும்போது, அந்தப் பொருள் மங்கலாகத் தெரிந்தால் அல்லது முழுக்கவே தெரியாவிட்டால், கண் பார்வையில் கோளாறு என்று அர்த்தம்!

லேசர் அறுவை சிகிச்சையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் செய்து கொள்ள வேண்டும். அதே போல 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் லேசர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதல்ல!

குறைந்தது 10 அடி தூர இடைவெளி வைத்து டி.வி. பார்ப்பதுதான் நல்லது. டி.வி. பார்க்கும் அறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்!

கம்ப்யூட்டரில்தான் உங்களுக்கு வேலை என்றால், எதிரே நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்களின் முகம் கம்ப்யூட்டரைவிட உயரமாக இருக்கும்படி அமைய வேண்டும். அதாவது, தலையை உயர்த்திப் பார்க்காமல், கம்ப்யூட்டர் திரை உங்கள் பார்வையின் கீழ்க்கோணத்தில் இருப்பது நல்லது!
குழந்தைகள் புத்தகத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படித்தாலோ, டி.வி-க்கு மிக அருகில் அமர்ந்து பார்த்தாலோ அது கிட்டப் பார்வைக்கான அறிகுறி. உடனே உஷார் ஆகுங்கள்!

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. அயோடின் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்!

சாலையோரம் விற்கப்படும் மலிவு விலை குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத் தாதீர்கள். இன்றைய சிக்கனம் நாளைய பிரமாண்ட செலவாக இருக்கலாம்!

கண்ணுக்கு மை அழகுதான். ஆனால், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கண் மை இமைக்கு உள்ளே படக்கூடாது. ஒருவர் உபயோகித்த மையை இன்னொருவர் பயன்படுத்துவதும் சுகாதாரமானது அல்ல!
இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம். ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும். கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு, மற்றவருக்குத் தானமாகத் தரலாம்!

No comments: