Friday 27 March 2009

கடைசி பக்கம்.... (ஒரு பக்க கதை)

டேய் முருகா சீக்கிரம் கிளம்புடா என்று அவனுடைய அம்மா சொல்லும் பொது, முருகன் அந்த புத்தகத்தை படித்து முடிப்பதில் தீவிரமாய் இருந்தான். 'கடைசி நிமிடம்' என தலைப்பிட்ட அந்த கதையின் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த அவன், கதையின் முடிவை கொண்ட கடைசி பக்கம் இல்லாததை கண்டு திடுக்கிட்டான். 'ஒ' என்று சொல்லியபடியே கண்ணை மூடிய போது, நேற்று மாலை நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

கடைசி கப் சுண்டல் விற்றபோது இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை கிழித்து ஒரு ஜோடிக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தவனாக, அம்மாவிடம் சொல்லிவிட்டு சுண்டல் விற்க மெரீனா நோக்கி சென்று கொண்டிருந்தான் 7 வது படிக்கும் முருகன்.

- சூரியபிரகாஷ். வா

No comments: